ETV Bharat / state

பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

author img

By

Published : Dec 28, 2019, 5:47 PM IST

சென்னை: பொங்கல் தினத்தன்று பிரதமர் மோடி பேச்சைக் கேட்க மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கல்வித்துறையில் அலுவலர்களிடையே போதிய புரிதல் இல்லாத காரணத்தால் முரண்பாடான பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுவருகின்றன. பொங்கல் பண்டிகையை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடக்கூடாது என்கிற நோக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளது. இதுபோன்ற குழப்பதைத் தவிர்க்க, விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிக்கை வெளியிட வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா ? - ஸ்டாலின் கேள்வி

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கல்வித்துறையில் அலுவலர்களிடையே போதிய புரிதல் இல்லாத காரணத்தால் முரண்பாடான பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுவருகின்றன. பொங்கல் பண்டிகையை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடக்கூடாது என்கிற நோக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளது. இதுபோன்ற குழப்பதைத் தவிர்க்க, விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிக்கை வெளியிட வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா ? - ஸ்டாலின் கேள்வி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 28.12.19

பொங்கல் தினத்தன்று பிரதமர் பேச்சை கேட்க மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அறிவிக்கைக்கு ஆசிரியர் சங்கத் தலைவர் எதிர்ப்பு...

ஜனவரி மாதம் 16ம் தேதி உயர்கல்வி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுவதை கேட்பதற்காக பொங்கல் தினத்தை அடுத்த மாட்டுப் பொங்கல் தினமான 16ம் தேதி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய தினத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறையால் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் விழாவின் போது பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கை வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழக ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் பேட்டியளிக்கையில், கல்வித்துறையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் இடையே போதிய புரிதல் இல்லாத காரணங்களினால் முரண்பாடான பல அறிவிக்கைகள் வந்துகொண்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழர் பண்டிகையை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடக் கூடாது என்கிற நோக்கில் வெளியிடப்பட்டு பின்னர் அது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கின்றனர். இதுபோன்ற குழப்பதை தவிர்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்கிற அறிவிக்கையினை அரசு வெளியிட வேண்டும்.. இனி வரும் காலங்களில் இந்த குழப்பங்களை தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்..

tn_che_02_teachers_association_president_byte_script_7204894
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.