ETV Bharat / state

'நாளை நடக்கவிருக்கும் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை'

author img

By

Published : Mar 22, 2020, 5:14 PM IST

சென்னை: மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவிருக்கும் 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Teachers' request to postpone 11,12th public exam
Teachers' request to postpone 11,12th public exam

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு முதலைமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ”கரோனா பாதிப்பு பரவலைத் தடுத்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் முதலமைச்சருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்கள் நலன் கருதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு மாற்றியமைத்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் முழு மனதோடு வரவேற்கிறோம். ஆனால் இக்கட்டான நிலையிலும் நாளை தேர்வெழுதும் மாணவர்களை கரோனா தாக்காமல் இருக்க பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்திலும் பெரும் மன உளைச்சலிலும் உள்ளார்கள்.

எல்லா வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி உடனடி நடவடிக்கை எடுத்து நாளை நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு நடத்திட வேண்டும். மத்திய அரசின் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டும் . ஆசிரியர்களும் பொதுமக்களின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, பொது இடங்களில் அதிகமாகப் பயணிக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், மக்கள் நலன் கருதி அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக!

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு முதலைமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ”கரோனா பாதிப்பு பரவலைத் தடுத்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் முதலமைச்சருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்கள் நலன் கருதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு மாற்றியமைத்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் முழு மனதோடு வரவேற்கிறோம். ஆனால் இக்கட்டான நிலையிலும் நாளை தேர்வெழுதும் மாணவர்களை கரோனா தாக்காமல் இருக்க பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்திலும் பெரும் மன உளைச்சலிலும் உள்ளார்கள்.

எல்லா வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி உடனடி நடவடிக்கை எடுத்து நாளை நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு நடத்திட வேண்டும். மத்திய அரசின் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டும் . ஆசிரியர்களும் பொதுமக்களின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, பொது இடங்களில் அதிகமாகப் பயணிக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், மக்கள் நலன் கருதி அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.