சென்னை: உள் விழி கண்ணாடி வில்லைகளுக்கு (லென்ஸ்) மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த கண்ணாடிகளை மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் விற்கும்போது விலக்கு வழங்கப்படுகிறதா? என அரசு தரப்பு வழக்கறிஞரிடமும், காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த மாநில வரி அதிகாரி முகுந்தனிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், பிற மாநிலங்களுக்கு விற்கப்படும்போது வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கில் தீர்ப்பு வாசிக்கும்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் கண்ணாடி வில்லைகள் விற்கும்போது அதற்கு விற்பனை வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த முக்கியமான தகவலை மறைத்ததாக, வரி அலுவலருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வணிகவரித் துறைக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் பாஜக கல்யாணராமன் மீது விசிக புகார்