ETV Bharat / state

முடியாத வேலைக்கு 10 கோடி ரூபாய் கட்டணமாம் - விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு - சிசிடிவி சர்ச்சையில் சிக்கிய தமிழ்நாடு காவல்துறை

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் நிறைவடையாத திட்டத்திற்காக பத்து கோடி ரூபாய் கட்டணம் செலுத்தியிருப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu police
author img

By

Published : Nov 20, 2019, 9:18 PM IST

தமிழ்நாட்டில் சென்னை உட்பட இரண்டு முக்கிய நகரங்களில் 'ஆப்கோ' திட்டத்தின் மூலம் காவல்துறைக்குத் தேவையான வயர்லஸ் கருவிகள், சிசிடிவி, பாடி வார்ன் கேமரா உள்ளிட்டவை வாங்க 86.57 கோடிகளும், ’டி.எம்.ஆர்’ எனும் திட்டத்தின் மூலம் பத்து மாவட்டங்களுக்கு, டிஜிட்டல் மொபைல், ரேடியோ உள்ளிட்ட கருவிகளுக்காக ரூ57.49 கோடிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், நிறைவடையாத இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில், அலைக்கற்றை கட்டணமாக பத்து கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கோ மற்றும் டி.எம்.ஆர் திட்டங்கள் கொண்டு வரப்பட்ட 2017ஆம் ஆண்டு முதல் வாங்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளுக்கான தகவல் தொடர்பிற்கு அலைக்கற்றை கட்டணமாக 3.3 கோடி வீதம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறைக்கு 'ஆப்கோ' மற்றும் 'டிஎம்ஆர்' ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்கான டெண்டர் முறைகளில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.ஆனால்,சில அலுவலர்கள் நடைமுறைத் தவறுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முடியாத பணிக்காக 10 கோடி ரூபாயை தமிழகக் காவல்துறை கட்டணமாக செலுத்தியிருப்பதும், இதில் முறைகேடு நடந்திருக்கிறதா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சரே உத்தரவிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட இரண்டு முக்கிய நகரங்களில் 'ஆப்கோ' திட்டத்தின் மூலம் காவல்துறைக்குத் தேவையான வயர்லஸ் கருவிகள், சிசிடிவி, பாடி வார்ன் கேமரா உள்ளிட்டவை வாங்க 86.57 கோடிகளும், ’டி.எம்.ஆர்’ எனும் திட்டத்தின் மூலம் பத்து மாவட்டங்களுக்கு, டிஜிட்டல் மொபைல், ரேடியோ உள்ளிட்ட கருவிகளுக்காக ரூ57.49 கோடிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், நிறைவடையாத இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில், அலைக்கற்றை கட்டணமாக பத்து கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கோ மற்றும் டி.எம்.ஆர் திட்டங்கள் கொண்டு வரப்பட்ட 2017ஆம் ஆண்டு முதல் வாங்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளுக்கான தகவல் தொடர்பிற்கு அலைக்கற்றை கட்டணமாக 3.3 கோடி வீதம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறைக்கு 'ஆப்கோ' மற்றும் 'டிஎம்ஆர்' ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்கான டெண்டர் முறைகளில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.ஆனால்,சில அலுவலர்கள் நடைமுறைத் தவறுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முடியாத பணிக்காக 10 கோடி ரூபாயை தமிழகக் காவல்துறை கட்டணமாக செலுத்தியிருப்பதும், இதில் முறைகேடு நடந்திருக்கிறதா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சரே உத்தரவிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:தமிழக காவல் துறைக்கு ஆப்கோ எனும் திட்டத்தின் மூலம் புதிய தகவல் தொழில் நுட்ப தளவாடங்கள் வாங்குவதற்கு 2017-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இன்னும், பணிகள் முடியாத இந்த திட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசிற்கு அலைக்கற்றை கட்டணமாக 10 கோடி ரூபாய் வரை தமிழக காவல் துறை செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட இரண்டு முக்கிய நகரங்களில் ஆப்கோ எனும் திட்டத்தின் மூலம் புதிய தகவல் தொழில் நுட்ப தளவாடங்கள் வாங்க ரூ86.57 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் வயர்லஸ் கருவிகள், சிசிடிவி, பாடி வார்ன் கேமரா ஆகியவை இடம் பெறுகின்றன. இதே போல டி.எம்.ஆர் எனும் திட்டத்தின் மூலம் 10 மாவட்டங்களிலும் டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட கருவிகளுக்காக ரூ57.49 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டமும் 2017 -ல் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட இந்த திட்டங்களில் முறைக்கேடு என லஞ்ச ஒழிப்பு துறை ஒரு பக்கம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் தமிழக காவல் துறை தெரிவித்த விளக்க அறிக்கையில் நடைமுறை தவறுகள் நடந்துள்ளது என ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டங்கள் 3 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் முடியவில்லை எனவும் அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிறைவடையாத இந்த திட்டத்திற்காக தமிழக காவல் துறை அலைக்கற்றை கட்டணமாக 10 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டணம் செலுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கோ மற்றும் டி.எம்.ஆர் திட்டங்கள் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு முதல் வாங்கப்பட்ட தொழில் நுட்ப கருவிளுக்கான தகவல் தொடர்பிற்கு மத்திய அரசுக்கு ஆண்டுக்கு அலைக்கற்றை (Spectrum) கட்டணமாக ரூ3.3 கோடி வீதம் செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. காவல் துறையின் தொழில் நுட்ப பிரிவில் நடைமுறை தவறுகள் நடந்திருப்பதை காவல் துறையே ஒப்புக்கொண்ட நிலையில், முடியாத பணிக்காக இதுவரை ரூ10 கோடி கட்டணம் செலுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.