மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஜுன்.24) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 268 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 6 ஆயிரத்து 159 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 3 நபர்களுக்கும் என 6,162 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 415 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 49 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 9 ஆயிரத்து 46 பேர் மேலும் குணமடைந்தது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 67 ஆயிரத்து 831 என உயர்ந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 57 நோயாளிகளும், அரசு மருத்துமனைகளில் 98 நோயாளிகளும் என மேலும் 155 பேர் இறந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 901 என உயர்ந்துள்ளது.
மாவட்டம்வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,30,789
கோயம்புத்தூர் - 2,15,808
செங்கல்பட்டு - 1,55,325
திருவள்ளூர் - 1,10,222
சேலம் - 85,725
திருப்பூர் - 80,426
ஈரோடு - 86,514
மதுரை - 71,793
காஞ்சிபுரம் - 69,714
திருச்சிராப்பள்ளி - 68,082
தஞ்சாவூர் - 62,166
கன்னியாகுமரி - 58,420
கடலூர் - 57,232
தூத்துக்குடி - 53,923
திருநெல்வேலி - 47,172
திருவண்ணாமலை - 48,481
வேலூர் - 46,596
விருதுநகர் - 44,133
தேனி - 41,995
விழுப்புரம் - 42,043
நாமக்கல் - 43,511
ராணிப்பேட்டை - 40,442
கிருஷ்ணகிரி - 39,181
நாகப்பட்டினம் - 37,554
திருவாரூர் - 36,434
திண்டுக்கல் - 31,331
புதுக்கோட்டை - 26,529
திருப்பத்தூர் - 27,351
தென்காசி - 26,400
நீலகிரி - 27,726
கள்ளக்குறிச்சி - 26,364
தருமபுரி - 23,854
கரூர் - 21,751
ராமநாதபுரம் - 19,479
சிவகங்கை - 17,262
அரியலூர் - 14,495
பெரம்பலூர் - 10,909
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428