ETV Bharat / state

வளர்ச்சி குறைவுக்கு மத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு!

author img

By

Published : Dec 18, 2019, 1:32 PM IST

சென்னை: இந்தியாவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டாலும், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மேலோங்கி காணப்படுவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

tamilnadu industrial

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நுகர்வு குறைவு, மக்களின் வாங்கும் திறன் குறைவு, முதலீடுகள் குறைவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என தொடர்ந்து எதிர்மறையான தகவல் வந்துகொண்டிருக்கிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி மேலும் குறையும் என கணித்துள்ளன.

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இல்லாமலில்லை. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால், வேலையிழப்புகள் ஏற்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர். ஆனாலும் நிலைமை முற்றிலும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது.

2ஆவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 19 ஆயிரத்து 762 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் கிடைக்கும் என்றும், 74 ஆயிரத்து 814 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதிபெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

இது குறித்து பேசிய தொழில்துறை ஆலோசகர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொழில்துறைக்கு சாதகமான முடிவை எடுப்பர் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஆந்திராவில், புதிய அரசு அமைந்த பிறகு கவர்ச்சிகர மக்கள் நலத்திட்டத்திலேயே கவனம் செலுத்தப்படுகிறது. முந்தைய ஆட்சி காலத்தில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் மஹாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது" என்றார்.

தமிழ்நாட்டுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள், கடந்த 2017 மார்ச் மாதத்தில் ரூ.133 டிரில்லியனாக இருந்த நிலையில் 2019 ஜூன் மாதத்தில் ரூ.180 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அந்நிய முதலீடுகள் 46 ஆயிரத்து 427 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெறும் மாநிலங்கள் பட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மந்த நிலையால் தமிழ்நாடு பெரிய அளவுக்கு பாதிக்கப்படாததற்கு முக்கிய காரணம் பல்வேறு துறைசார்ந்த தொழில்கள் உள்ளதும், உற்பத்தி துறையும், சேவை துறையும் சரியான விகிதத்தில் உள்ளதுமே என்று கூறலாம்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த தொழில்துறை அலுவலர் ஒருவர், "புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் பல்வேறு தேவைகள் உள்ளது. மற்ற மாநிலங்களில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைத்தாலும், திறன்வாய்ந்த தொழிலாளர்கள், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றன.

நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்கும் வகையிலும், தென் தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நுகர்வு குறைவு, மக்களின் வாங்கும் திறன் குறைவு, முதலீடுகள் குறைவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என தொடர்ந்து எதிர்மறையான தகவல் வந்துகொண்டிருக்கிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி மேலும் குறையும் என கணித்துள்ளன.

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இல்லாமலில்லை. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால், வேலையிழப்புகள் ஏற்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர். ஆனாலும் நிலைமை முற்றிலும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது.

2ஆவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 19 ஆயிரத்து 762 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் கிடைக்கும் என்றும், 74 ஆயிரத்து 814 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதிபெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

இது குறித்து பேசிய தொழில்துறை ஆலோசகர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொழில்துறைக்கு சாதகமான முடிவை எடுப்பர் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஆந்திராவில், புதிய அரசு அமைந்த பிறகு கவர்ச்சிகர மக்கள் நலத்திட்டத்திலேயே கவனம் செலுத்தப்படுகிறது. முந்தைய ஆட்சி காலத்தில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் மஹாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது" என்றார்.

தமிழ்நாட்டுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள், கடந்த 2017 மார்ச் மாதத்தில் ரூ.133 டிரில்லியனாக இருந்த நிலையில் 2019 ஜூன் மாதத்தில் ரூ.180 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அந்நிய முதலீடுகள் 46 ஆயிரத்து 427 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெறும் மாநிலங்கள் பட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மந்த நிலையால் தமிழ்நாடு பெரிய அளவுக்கு பாதிக்கப்படாததற்கு முக்கிய காரணம் பல்வேறு துறைசார்ந்த தொழில்கள் உள்ளதும், உற்பத்தி துறையும், சேவை துறையும் சரியான விகிதத்தில் உள்ளதுமே என்று கூறலாம்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த தொழில்துறை அலுவலர் ஒருவர், "புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் பல்வேறு தேவைகள் உள்ளது. மற்ற மாநிலங்களில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைத்தாலும், திறன்வாய்ந்த தொழிலாளர்கள், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றன.

நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்கும் வகையிலும், தென் தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Intro:Body:வளர்ச்சி குறைவுக்கு மத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு!

சென்னை:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நுகர்வு குறைவு, மக்களின் வாங்கும் திறன் குறைவு, முதலீடுகள் குறைவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என தொடர்ந்து எதிர்மறையான தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி மேலும் குறையும் என கணித்துள்ளன. அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்திலும் இதன் தாக்கம் இல்லாமல் இல்லை. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால் வேலை இழப்புகள் ஏற்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர். வங்கியில் கடன் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தொழில் முனைவோர் கூறுகின்றனர். மின்சார பயன்பாடு குறைந்துள்ளது தொழில் மந்த நிலையின் குறியீடாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் நிலைமை முற்றிலும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது. 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்மூலம், 19 ஆயிரத்து 762 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் கிடைக்கும் என்றும், 74 ஆயிரத்து 814 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதிபெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். தமிழகத்திற்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு போதிய திறன் படைத்த தொழிலாளர்களை கிடைக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இளைஞர்களுக்கு நிறுவனங்களின் தேவைக்கேற்ப அரசின் நிதியில் பயிற்சி அளிக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை தொழில்துறையில் முன்னோடி மாநிலமான தமிழகம், ஏற்கெனவே செயல்படும் நிறுவனங்களையும், புதிய முதலீடுகளையும் ஆந்திர மாநிலத்திடம் இழப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய தொழில்துறை ஆலோசகர் ஒருவர், "அரசியல் ஸ்திரத்தன்மை இதற்கு முக்கிய காரணம். சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. ஆனால் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொழில்துறைக்கு சாதகமான முடிவை எடுப்பர் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஆந்திரத்தில் புதிய அரசு அமைந்த பிறகு கவர்ச்சிகர மக்கள் நலத்திட்டத்திலேயே கவனம் செலுத்தப்படுகிறது. முந்தைய ஆட்சி காலத்தில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் மஹாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது" என்றார்.

தமிழகத்திற்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள், கடந்த 2017 மார்ச் மாதத்தில் ரூ.133 டிரில்லியனாக இருந்த நிலையில் 2019 ஜூன் மாதத்தில் ரூ.180 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அந்நிய முதலீடுகள் 46 ஆயிரத்து 427 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெறும் மாநிலங்கள் பட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மந்த நிலையால் தமிழகம் பெரிய அளவுக்கு பாதிக்கப்படாததற்கு முக்கிய காரணம் பல்வேறு துறைசார்ந்த தொழில்கள் உள்ளதும், உற்பத்தி துறையும், சேவை துறையும் சரியான விகிதத்தில் உள்ளதுமே என்று கூறலாம். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத தொழில்துறை அதிகாரி ஒருவர், "புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் பல்வேறு தேவைகள் உள்ளது. மற்ற மாநிலங்களில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைத்தாலும், திறன்வாய்ந்த தொழிலாளர்கள், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் நிறுவனங்கள் தமிழகத்தை தேர்வு செய்கின்றன. தற்போது, நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்கும் வகையிலும், தென் தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் தென் தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிப்பதற்கு தமிழக தொழில்துறையும் முக்கிய காரணம் எனலாம். புதிதாக தொழில்தொடங்க வரும் நிறுவனங்களுக்கு பல்வேறு துறை சென்று அலைந்து அனுமதி பெறாமல் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. நாட்டில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனம் அனுமதி பெற மூன்று முதல் ஆறு மாதம் வரை ஆகும் நிலையில் தமிழகத்தில் ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது. தொழில் தொடங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரத்யேக இணையதளம், தொழில்முனைவோர், நிறுவனங்களின் குறைகளை தீர்க்கும் புதிய தொழில் நண்பன் இணையதளம் (biz buddy), நவீனமயமாக்கப்பட்ட தொழில் வழிகாட்டித் துறை என சிறப்பான வகையில் செயலாற்றி வருகிறது. வானூர்தி மற்றும் ராணுவ தொழில் உற்பத்தி கொள்கை மற்றும் வழித்தடம், வளர்ந்து வரும் மின்சார வாகன நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் மின்சார வாகன உற்பத்தி கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை, புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்க கொள்கை, உணவு பதப்படுத்துதல் கொள்கை என தெளிவான திட்டத்துடன், நீண்டகால மற்றும் குறுகிய கால இலக்குடன் பயணித்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.







Conclusion:use file photos
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.