ETV Bharat / state

குட்டிமணி, தங்கதுரை நினைவுத் தூணில் மாவீரர் நாள் அனுசரிப்பு!

author img

By

Published : Nov 28, 2019, 7:34 AM IST

சென்னை: 1983ஆம் ஆண்டு சிங்கள காவல் படையினரால் கொல்லப்பட்ட குட்டி மணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரின் நினைவுத்தூணில் தமிழர் விடுதலைக் கழகத்தினர் மாவீரர் நாளை அனுசரித்தனர்.

ஆவடி மாவீரர் நாள்  குட்டி மணி தங்கதுரை நினைவுத்தூண்  ஈழ விடுதலைப்போராளிகள் நினைவு நாள்  மாவீரர் நாள் அனுசரிப்பு  tamil heroes day  tamil eelam hearoes day november 27  tamilar viduthalai kalagam members celeberate the tamil eelam heros day
ஆவடி மாவீரர் நாள் நிகழ்வு

ஈழ விடுதலைப்போரில் உயிர் ஈந்த போராளிகளை நினைவுகூறும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர்கள் பரவி வாழக்கூடியப் பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

1983ஆம் ஆண்டு சிங்கள காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராளிகளான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர்களின் நினைவாக ஆவடி பேருந்து நிலையம் அருகில் நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டது.

ஆவடி மாவீரர் நாள் கொண்டாட்டம்

அங்குள்ள மாவீரர் தூணில் தமிழர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அதுபோல்,நேற்று (நவம்பர்27) தமிழர் விடுதலைக்கழக ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, செங்காந்தள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: படித்தது ஆங்கில இலக்கியம்! பிடித்தது காளை வளர்ப்பு! - காளைகளின் தங்கச்சி கனிமொழி

ஈழ விடுதலைப்போரில் உயிர் ஈந்த போராளிகளை நினைவுகூறும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர்கள் பரவி வாழக்கூடியப் பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

1983ஆம் ஆண்டு சிங்கள காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராளிகளான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர்களின் நினைவாக ஆவடி பேருந்து நிலையம் அருகில் நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டது.

ஆவடி மாவீரர் நாள் கொண்டாட்டம்

அங்குள்ள மாவீரர் தூணில் தமிழர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அதுபோல்,நேற்று (நவம்பர்27) தமிழர் விடுதலைக்கழக ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, செங்காந்தள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: படித்தது ஆங்கில இலக்கியம்! பிடித்தது காளை வளர்ப்பு! - காளைகளின் தங்கச்சி கனிமொழி

Intro:சென்னை ஆவடியில் உள்ள மாவீரர் நினைவு தூணின் முன்பாக மாவீரரை நாளை தமிழர் விடுதலைக் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றியும், செங்காந்தள் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்Body:சென்னை ஆவடியில் உள்ள மாவீரர் நினைவு தூணின் முன்பாக மாவீரரை நாளை தமிழர் விடுதலைக் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றியும், செங்காந்தள் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று ஈழ விடுதலைப் போரில் மாண்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு சிங்கள காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராளிகள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர்களின் நினைவாக ஆவடி பேருந்து நிலையம் அருகில் நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அங்கு உள்ள மாவீரர் தூணில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் போரில் மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 27 இன்று தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.இதில் 50கும் மேற்பட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி,செங்காந்தள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.