கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 48 நாள்களில் தடையை மீறியதாக 4,54,016 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. 3,75,792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4,91,79,379 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்த முதல் சுகாதாரப் பணியாளர்!