ETV Bharat / state

ஜெ வீட்டு சாவி: உத்தரவுக்கு இடைக்காலத் தடை - boyas garden

சென்னை: நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃப
ஃப
author img

By

Published : Jan 29, 2021, 3:28 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக நேற்று திறந்துவைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல்செய்த வழக்குகளை நேற்று முன்தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி தொடக்க விழாவை நடத்திக்கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மேலும் தொடக்க விழாவுக்குப் பின் போயஸ்தோட்ட இல்ல சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும், பிரதான நுழைவு வாயிலை மட்டும் திறக்க வேண்டும், கட்டடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக தீபா, தீபக்கை அறிவிக்கும் முன்னும், அறிவித்த பின்னும், வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்கப்பட்டதாகவும், ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி கையகப்படுத்தியுள்ளதால் சாவியை அரசே வைத்திருப்பதில் மனுதாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்தனர்.

அதேசமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு தொடரும் என்றும், வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக நேற்று திறந்துவைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல்செய்த வழக்குகளை நேற்று முன்தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி தொடக்க விழாவை நடத்திக்கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மேலும் தொடக்க விழாவுக்குப் பின் போயஸ்தோட்ட இல்ல சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும், பிரதான நுழைவு வாயிலை மட்டும் திறக்க வேண்டும், கட்டடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக தீபா, தீபக்கை அறிவிக்கும் முன்னும், அறிவித்த பின்னும், வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்கப்பட்டதாகவும், ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி கையகப்படுத்தியுள்ளதால் சாவியை அரசே வைத்திருப்பதில் மனுதாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்தனர்.

அதேசமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு தொடரும் என்றும், வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.