ETV Bharat / state

தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு

author img

By

Published : Feb 18, 2022, 10:48 PM IST

தமிழ்நாட்டில் புதிதாகக் கடந்த 24 மணி நேரத்தில் காரணம் வைரஸ் தொற்றினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை 1146 என வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 681 எனக் குறைந்துள்ளன.

தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ஆம் தேதி  கரோனா பாதிப்பு  எண்ணிக்கை
தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை

சென்னை: பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 79 ஆயிரத்து 735 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டிலிருந்த 1146 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 25 லட்சத்து 61 ஆயிரத்து 662 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு

இதன் மூலம் 34 லட்சத்து 42 ஆயிரத்து 929 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. அவர்களில் தற்போது 20 ஆயிரத்து 681 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 4229 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 84 ஆயிரத்து 278 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என 8 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 970 என உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொகைக் கணக்கில் சேரும்வரை ரசீது கொடுக்கக் கூடாது! - அறநிலையத் துறை

சென்னை: பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 79 ஆயிரத்து 735 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டிலிருந்த 1146 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 25 லட்சத்து 61 ஆயிரத்து 662 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து கரோனா பாதிப்பு

இதன் மூலம் 34 லட்சத்து 42 ஆயிரத்து 929 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. அவர்களில் தற்போது 20 ஆயிரத்து 681 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 4229 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 84 ஆயிரத்து 278 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என 8 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 970 என உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொகைக் கணக்கில் சேரும்வரை ரசீது கொடுக்கக் கூடாது! - அறநிலையத் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.