ETV Bharat / state

அம்பேத்கர், பெரியாரிய கருத்துக்களை பேசிய மாணவனை நீக்கிய பல்கலைக்கழகம்!

author img

By

Published : Sep 9, 2019, 7:14 PM IST

சென்னை : அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்டதால் மாணவர் கிருபா மோகன் பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்கப்பட்டதைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் அடையாள போராட்டம்
ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்திய மாணவர்கள்.

இதுகுறித்து பேசிய முதுகலை பட்டப்படிப்பு மாணவர் ராஜாராமன், "சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் புத்திசம் பயிலும் மாணவர் கிருபா மோகனை நீக்கியது கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்திவருகிறோம்.

தகுதி சான்றிதழ் கொடுக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள் ஆனால் அம்பேத்கர், பெரியாரிய கருத்துகளை பேசியதற்காக அவர் நீக்கப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரிய கருத்துக்களைத்தான் பேசுவோம். அப்படி பேசியதால் ஆளுநரிடமிருந்து அழுத்தம் வருகிறது.

பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகின்றன. பேராசிரியர் நியமனத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன, நீட்டில் இருந்து புதிய தேசிய கல்விக் கொள்கைவரை சமூகத்தில் பிரச்னைகள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் மாணவர்கள் நாங்கள்தான் போராடுவோம். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அணிதிரண்டு போராட வேண்டும்" என்றார்.

ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்திய மாணவர்கள்.

இதுகுறித்து பேசிய முதுகலை பட்டப்படிப்பு மாணவர் ராஜாராமன், "சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் புத்திசம் பயிலும் மாணவர் கிருபா மோகனை நீக்கியது கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்திவருகிறோம்.

தகுதி சான்றிதழ் கொடுக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள் ஆனால் அம்பேத்கர், பெரியாரிய கருத்துகளை பேசியதற்காக அவர் நீக்கப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரிய கருத்துக்களைத்தான் பேசுவோம். அப்படி பேசியதால் ஆளுநரிடமிருந்து அழுத்தம் வருகிறது.

பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகின்றன. பேராசிரியர் நியமனத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன, நீட்டில் இருந்து புதிய தேசிய கல்விக் கொள்கைவரை சமூகத்தில் பிரச்னைகள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் மாணவர்கள் நாங்கள்தான் போராடுவோம். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அணிதிரண்டு போராட வேண்டும்" என்றார்.

Intro:Body:அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்டதால் சென்னைப் பல்கலைகழக மாணவர் கிருபா மோகன் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்பட்டார். இதனை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள் ககண்டித்து வருகின்றனர். அந்த வகையில் இதை கண்டித்து சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முதுகலை பட்டபடிப்பு மாணவர் ராஜாராமன், "சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் புத்திசம் பயிலும் மாணவர் கிருபா மோகனை நீக்கியது கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தி வருகிறோம். தகுதி சான்றிதழ் கொடுக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால் அம்பேத்கர் பெரியாரிய கருத்துகளை பேசியதற்காக அவர் நீக்கப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரிய கருத்துகளைதான் பேசுவோம். அப்படி பேசியதால் ஆளுநரிடம் இருந்து அழுத்தம் வருகிறது.

பல்கலைக்கழங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பேராசிரியர் நியமனத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன. நீட் தொடங்கி புதிய தேசிய கல்வி கொள்கை வரை சமுகத்தில் பிரச்னைகள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் மாணவர்கள் நாங்கள் தான் போராடுவோம். அப்படி போராடினல் கல்லூரியை விட்டு நீக்குவார்களா. எனவே இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அணிதிரண்டு போராட வேண்டும்" என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.