ETV Bharat / state

சென்னை தனியார் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் மரணம்.. முதலுதவி பெட்டி கூட இல்லை என பெற்றோர் வேதனை!

author img

By

Published : Jun 28, 2023, 7:25 AM IST

சென்னை ஏழு கிணறு பகுதியில் பள்ளி வளாகத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் பலி
பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் பலி

சென்னை: ஏழு கிணறு தையப்ப முதல் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது கடைசி மகன் கங்காதரன் (வயது 15). இவர் சென்னை முத்தியால்பேட்டை பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பு அறைக்கு செல்ல இரண்டாவது மாடிப் படிக்கட்டு வழியாக ஏறும்போது திடீரென கங்காதரன் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக நண்பர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

பின் மாணவர்கள் அவரை தூக்கி கொண்டு கீழே கொண்டு வந்து ஆசிரியர்கள் உதவியோடு கங்காதரனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த கங்காதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கலாம் என முதற்கட்டமாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மாணவனின் உறவினர்கள், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். ஆகவே போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பின்னர் மாணவனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கங்காதரனின் தந்தை, "கங்காதரன் கால்பந்து வீரர் என்றும், தினந்தோறும் கால்பந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை வலிப்பு ஏற்பட்டதில்லை என்றும், கால்பந்து வீரராகவும், படிப்பில் நாட்டமுள்ளவராகவும், இரண்டு வருட படிப்பு முடித்து இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார்" என்றும் கூறி உள்ளார்.

மேலும், மாணவன் நெற்றில் காயத்தோடு இறந்துள்ளான் என்றும், சுருண்டு விழுந்ததாக தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர் முதலுதவி கூட செய்யவில்லை, சுமார் 1000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முதலுதவி செய்யும் வசதிக்கூட இல்லை, சிசிடிவி கேமராக்களை பார்த்த போது மாணவர்கள் கூட்டமாக ஓடுவதாகவும், இதில் தள்ளிவிடப்பட்டு அதில் காயம் ஏற்பட்டே உயிர் இழந்து இருக்கக்கூடும் எனவும் மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகு தான் மாணவன் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பதில் அளிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்..! பதறவைக்கு சிசிடிவி காட்சி..!

சென்னை: ஏழு கிணறு தையப்ப முதல் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது கடைசி மகன் கங்காதரன் (வயது 15). இவர் சென்னை முத்தியால்பேட்டை பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பு அறைக்கு செல்ல இரண்டாவது மாடிப் படிக்கட்டு வழியாக ஏறும்போது திடீரென கங்காதரன் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக நண்பர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

பின் மாணவர்கள் அவரை தூக்கி கொண்டு கீழே கொண்டு வந்து ஆசிரியர்கள் உதவியோடு கங்காதரனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த கங்காதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கலாம் என முதற்கட்டமாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மாணவனின் உறவினர்கள், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். ஆகவே போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பின்னர் மாணவனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கங்காதரனின் தந்தை, "கங்காதரன் கால்பந்து வீரர் என்றும், தினந்தோறும் கால்பந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை வலிப்பு ஏற்பட்டதில்லை என்றும், கால்பந்து வீரராகவும், படிப்பில் நாட்டமுள்ளவராகவும், இரண்டு வருட படிப்பு முடித்து இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார்" என்றும் கூறி உள்ளார்.

மேலும், மாணவன் நெற்றில் காயத்தோடு இறந்துள்ளான் என்றும், சுருண்டு விழுந்ததாக தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர் முதலுதவி கூட செய்யவில்லை, சுமார் 1000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முதலுதவி செய்யும் வசதிக்கூட இல்லை, சிசிடிவி கேமராக்களை பார்த்த போது மாணவர்கள் கூட்டமாக ஓடுவதாகவும், இதில் தள்ளிவிடப்பட்டு அதில் காயம் ஏற்பட்டே உயிர் இழந்து இருக்கக்கூடும் எனவும் மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகு தான் மாணவன் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பதில் அளிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்..! பதறவைக்கு சிசிடிவி காட்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.