ETV Bharat / state

தனியார் மயமாகும் ரயில்வே -போராட இளைஞர்களுக்கு அழைப்பு!

author img

By

Published : Sep 25, 2019, 4:24 PM IST

சென்னை: ரயில்வேத் துறை தனியார்மயமானால், மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என்று எஸ்ஆர்எம்யூ கண்ணையா தெரிவித்துள்ளார்.

srmu kannaiah

சென்னை சேத்துப்பட்டில் ரயில்வேத் துறையை தனியார் மயமாக்கலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கண்ணையா, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 25 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் எனக்கூறி மக்களை ஏமாற்றும் சதித்திட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் ஐந்து ரயில்களை தனியாருக்கு கொடுக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால் தற்பொழுது கொடுக்கும் கட்டணத்தைவிட மூன்று மடங்கு கொடுக்க நேரிடும் எனக் கூறினார்.

மேலும், தாம்பரம் செல்ல தற்போது 10 ரூபாய், தனியார்மயமானால் 50 ரூபாய் கொடுக்க வேண்டும். சாமானியர்கள் ரயில்களில் செல்ல முடியாதபடி மத்திய அரசு செயல்பட உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனியார் மயமாவதை தடுக்க போராட வேண்டும். இனி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது ரயில்வே துறையில் கனவாகவே இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் ரயில்வேத் துறையை தனியார் மயமாக்கலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கண்ணையா, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 25 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் எனக்கூறி மக்களை ஏமாற்றும் சதித்திட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் ஐந்து ரயில்களை தனியாருக்கு கொடுக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால் தற்பொழுது கொடுக்கும் கட்டணத்தைவிட மூன்று மடங்கு கொடுக்க நேரிடும் எனக் கூறினார்.

மேலும், தாம்பரம் செல்ல தற்போது 10 ரூபாய், தனியார்மயமானால் 50 ரூபாய் கொடுக்க வேண்டும். சாமானியர்கள் ரயில்களில் செல்ல முடியாதபடி மத்திய அரசு செயல்பட உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனியார் மயமாவதை தடுக்க போராட வேண்டும். இனி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது ரயில்வே துறையில் கனவாகவே இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 25.09.19

ரயில்வே தனியார் மயமானால் தற்போது கொடுப்பதை விட மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்: எஸ்.ஆர்.எம்.யூ கண்ணையா பேட்டி..

சென்னை சேத்பட்டில் ரயில்வேதுறை தனியார் மயமாக்கலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கன்னையா,
பயணிகளுக்கு 25 லட்சம் இன்சூரன்ஸ் என மக்களை ஏமாற்றுகிறார்கள். ஐந்து ரயில்களை தமிழகத்தில் தனியாருக்கு கொடுக்க திட்டமிடப்படுகிறது. அப்படி நடந்தால் தற்பொழுது கொடுக்கும் கட்டணத்தை விட மூன்று மடங்கு கொடுக்க வேண்டும். மேலும், தாம்பரம் செல்ல தற்போது 10 ரூபாய், தனியார் மயமானால் 50 ரூபாய் கொடுக்க வேண்டும். சாமானியர்கள் ரயில்களில் செல்ல முடியாதபடி மத்திய அரசு செயல்பட உள்ளது. ரயில்வே துறைக்கு நேரடி பாதிப்பு இல்லை எனக் கூறுவது தவறு. அனைவரும் ஒன்றிணைந்து தனியார் மயமாவதை தடுக்க போராட வேண்டும். இனி இளைஞர்களுக்கு வேலை வாய்பு என்பது ரயில்வே துறையில் கனவாகவே இருக்கும். மிகப்பெரிய பாதிப்பு என்பது ஏற்பட உள்ளது. 01.08.19 அன்று நான் எழுதிய கடிதத்தில், தமிழ் மொழிக்கு எதிராக ரயில்வே நடந்துகொள்வதை தடுக்க ஒன்றாக இணைய வேண்டும் என்றார்..

tn_che_03_srmu_Kannaiya_byte_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.