ETV Bharat / state

சமூக வலைதளங்களுக்கான தணிக்கைக் குழு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Aug 5, 2020, 3:42 PM IST

சென்னை: யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொலிகளை தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sperate board for monitoring to avoid Malicious comments post in social media, MHC notice order
Sperate board for monitoring to avoid Malicious comments post in social media, MHC notice order

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி கவச விவகாரம், நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

குறும்படம் என்ற பெயரில் ஆபாச காணொலிகள் அதிகம் பதிவிடப்பட்டுவருகின்றது. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை. திரைப்படங்களை தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணொலிகளைை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காணொலிகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் அதில், குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஆக.5) விசாரணைக்கு வந்தது. இது முக்கியமான வழக்கு என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி கவச விவகாரம், நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

குறும்படம் என்ற பெயரில் ஆபாச காணொலிகள் அதிகம் பதிவிடப்பட்டுவருகின்றது. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை. திரைப்படங்களை தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணொலிகளைை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காணொலிகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் அதில், குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஆக.5) விசாரணைக்கு வந்தது. இது முக்கியமான வழக்கு என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.