ETV Bharat / state

திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை...! அமைச்சர் 'பளீச்' பதில் - முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி

சென்னை: திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதிலளித்தார்.

திருநங்கை
author img

By

Published : Jul 16, 2019, 6:08 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று நடைபெற்றது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மூன்றாம் பாலின மக்களுக்கு திருநங்கைகள் என பெயரிட்டதாகவும், அவர்களுக்கான நலவாரியம் அமைத்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தற்போது திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா? அதனை இலவசமாக மருத்துவக் காப்பீடு திட்டத்தில் செய்ய முடியுமா? என சரவணன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனியாக கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அங்கு ஏற்கனவே 17 திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய விஜய பாஸ்கர், மற்றொரு கிளினிக் மதுரையில் அமைய உள்ளதையும் தெரிவித்தார். திருநங்கைகளுக்கு இந்தச் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று நடைபெற்றது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மூன்றாம் பாலின மக்களுக்கு திருநங்கைகள் என பெயரிட்டதாகவும், அவர்களுக்கான நலவாரியம் அமைத்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தற்போது திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா? அதனை இலவசமாக மருத்துவக் காப்பீடு திட்டத்தில் செய்ய முடியுமா? என சரவணன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனியாக கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அங்கு ஏற்கனவே 17 திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய விஜய பாஸ்கர், மற்றொரு கிளினிக் மதுரையில் அமைய உள்ளதையும் தெரிவித்தார். திருநங்கைகளுக்கு இந்தச் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

Intro:Body:திருநங்கைகள் உறுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை அரசு மருத்துவ மனைகளில் செய்யபடுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் தெரிவித்தார்.

சுகாதார துறை மீதான மானிய கோரிக்கை இன்று நடந்தது. அதில் திருப்பரங்குன்றம் திமுக உறுப்பினர் சரவணன் பேசுகையில்,

முன்னாள் முதல்வர் கலைஞர் மூன்றாம் பாலின மக்களுக்கு திருநங்கைகள் என்று பெயரிட்டு அழைத்தார். அவர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுத்தார். திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா? இலவசமாக இதை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனியாக கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே 17 திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கிளினிக் மதுரையில் அமைய உள்ளது. திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை அரசு மருத்துவ மனையில் செய்யப்படும் என பேசினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.