ETV Bharat / state

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' நூலின் லட்சமாவது பிரதியை வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி...

author img

By

Published : Jan 20, 2020, 10:33 PM IST

சென்னை: 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' என்ற நூலின் லட்சமாவது பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கியுள்ளார்.

communist-party
communist-party

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' என்ற நூலின் லட்சமாவது பிரதியை வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி லட்சமாவது பிரதியை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து 'மார்க்சிஸ்ட் லைப்ரரி' என்ற பெயரில் மார்க்ஸின் எழுத்துக்கள் அடங்கிய ஆப் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, "இ-புக் வந்தாலும் அவை அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு நிகராகாது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை புத்தகம் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. எத்தனை முறை படித்தாலும் புதிய பொருளை தரும் புத்தகம் அது. மனிதனை மனிதன் சுரண்டாத, வர்க்க பேதமில்லாத சமூக அமைப்பை உருவாக்க இந்த புத்தகம் அவசியம் தேவை.

2008லிருந்து முதலாளித்துவத்தால் ஏற்பட்டுவரும் பொருளாதார சிக்கல்களுக்கு இப்புத்தகத்தில் தீர்வுள்ளது. காற்றைத் தவிர அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டெல்லியில் காற்றையும் விற்பனை செய்கிறார்கள்.

நாட்டிலுள்ள ஒரு சதவிகித மக்களிடம் நாட்டின் 70 சதவிகித மக்களிடமுள்ள சொத்துக்களைவிட 4 மடங்கு அதிகமாகவுள்ளது என ஆக்ஸ்பார்ம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிகளவு சுரண்டப்பட்டதால் தற்போது அவர்களிடம் நுகர்வு சக்தியில்லை. இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் லாபம் குறையுமென முதலாளிகள் நினைக்கிறார்கள். பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது" என்றார்.

லட்சமாவது பிரதி வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி

மேலும் பேசிய அவர், குடியுரிமை கொடுக்கத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேடு எதற்கு?. என கேள்வி எழுப்பினார். அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே தவிர நீதி வழங்கவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்வி கேட்டால் பதிலளிக்கக்கூடாது, ஆவணங்களை காட்டக்கூடாது" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யாரிடமும் ஆவணங்கள் கேட்காதீர்கள் என்றுதான் மோடியிடம் நாங்கள் கூறுகிறோம். 13 மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரும் 23ஆம் தேதி பகத்சிங் பிறந்த தினத்தை மதநல்லிணக்க, மத ஒற்றுமை தினமாகவும் 26ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை பாதுகாப்போம் என உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோல் 30ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினமும் அனுசரிக்கப்படும்" என்றார். இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷணன், மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும், மீறக்கூடாது' - சீத்தாராம் யெச்சூரி

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' என்ற நூலின் லட்சமாவது பிரதியை வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி லட்சமாவது பிரதியை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து 'மார்க்சிஸ்ட் லைப்ரரி' என்ற பெயரில் மார்க்ஸின் எழுத்துக்கள் அடங்கிய ஆப் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, "இ-புக் வந்தாலும் அவை அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு நிகராகாது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை புத்தகம் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. எத்தனை முறை படித்தாலும் புதிய பொருளை தரும் புத்தகம் அது. மனிதனை மனிதன் சுரண்டாத, வர்க்க பேதமில்லாத சமூக அமைப்பை உருவாக்க இந்த புத்தகம் அவசியம் தேவை.

2008லிருந்து முதலாளித்துவத்தால் ஏற்பட்டுவரும் பொருளாதார சிக்கல்களுக்கு இப்புத்தகத்தில் தீர்வுள்ளது. காற்றைத் தவிர அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டெல்லியில் காற்றையும் விற்பனை செய்கிறார்கள்.

நாட்டிலுள்ள ஒரு சதவிகித மக்களிடம் நாட்டின் 70 சதவிகித மக்களிடமுள்ள சொத்துக்களைவிட 4 மடங்கு அதிகமாகவுள்ளது என ஆக்ஸ்பார்ம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிகளவு சுரண்டப்பட்டதால் தற்போது அவர்களிடம் நுகர்வு சக்தியில்லை. இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் லாபம் குறையுமென முதலாளிகள் நினைக்கிறார்கள். பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது" என்றார்.

லட்சமாவது பிரதி வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி

மேலும் பேசிய அவர், குடியுரிமை கொடுக்கத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேடு எதற்கு?. என கேள்வி எழுப்பினார். அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே தவிர நீதி வழங்கவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்வி கேட்டால் பதிலளிக்கக்கூடாது, ஆவணங்களை காட்டக்கூடாது" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யாரிடமும் ஆவணங்கள் கேட்காதீர்கள் என்றுதான் மோடியிடம் நாங்கள் கூறுகிறோம். 13 மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரும் 23ஆம் தேதி பகத்சிங் பிறந்த தினத்தை மதநல்லிணக்க, மத ஒற்றுமை தினமாகவும் 26ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை பாதுகாப்போம் என உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோல் 30ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினமும் அனுசரிக்கப்படும்" என்றார். இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷணன், மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும், மீறக்கூடாது' - சீத்தாராம் யெச்சூரி

Intro:Body:சென்னை:

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' நூலின் 1 லட்சமாவது பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் 'மார்க்சிஸ்ட் லைப்ரரி' என்ற பெயரில் மார்க்ஸ் -இன் எழுத்துக்கள் ஆப் வடிவில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சீத்தாராம் யெச்சூரி,

இ- புக் வந்தாலும் அவை அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு மாற்றாகாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எத்தனை முறை படித்தாலும் புதிய பொருளை தரும் புத்தகம் இது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெறும் அறிவியல் படைப்பு இல்லை, மனிதனை மனிதன் சுரண்டாத, வர்க்க பேதமில்லாத சமூக அமைப்பை உருவாக்க இந்த புத்தகம் தேவை.

பத்தாண்டுகளுக்கு முன்பைவிட இப்போது அதிகம் படிக்கப்படுகிறது. 2008 முதல் முதலாளித்துவத்தால் ஏற்பட்டும் வரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு இந்த புத்தகத்தில் தீர்வு உள்ளது.

சோவியத் ஒன்றியம் இருந்த காலகட்டத்தில் சோசியலிசம் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு அனைத்து சலுகைகளையும் நிறுத்தி விட்டார்கள். அதுதான் தற்போதைய பொருளாதார பிரச்சனைக்கு காரணம். முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்க தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது. காற்றை தவிர அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது டெல்லியில் காற்றையும் விற்பனை செய்கிறார்கள்.

நாட்டில் உள்ள ஒரு சதவிகித மக்களிடம் நாட்டின் 70 சதவிகிதம் மக்களிடம் உள்ள சொத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது என் ஆக்ஸ்பார்ம் அறிக்கை கூறுகிறது. மக்கள் அதிக அளவு சுரண்டப்பட்டதல் அவர்களிடம் தற்போது வாங்கு சக்தி இல்லை. மக்களிடம் பணம் கொடுக்க வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஆனால் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் லாபம் குறையும் என முதலாளிகள் நினைக்கிறார்கள். பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

CAA மூலம் சமூகத்தை பிரித்து, இந்து முஸ்லீம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த வேண்டும் என முயற்சி செய்கின்றனர்.

குடியுரிமை கொடுக்க தான் குடியுரிமை திருத்த சட்டம் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேடு எதற்கு?. குடிமக்கள் பதிவேடு நடத்தவே தேசிய மக்கள்தொகை பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மக்கள் போராடினால் காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிக போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான சிறுபான்மையினர் மீதே வழக்கு பதியப்படுகிறது.

அயோத்தியா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஆனால் நீதி வழங்கவில்லை.

முதலாளித்துவம் தனாக வீழ்ச்சி அடையாது. நாம்தான் தூக்கி எறிய வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்வி கேட்டால் பதிலளிக்க கூடாது, ஆவணகளை காட்டக்கூடாது" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரிடமும் ஆவணங்கள் கேட்காதீர்கள் என்றுதான் மோடியிடம் நாங்கள் கூறுகிறோம். இதனால் ஆவணங்கள் இல்லாத அவரும் காப்பாற்றப்படுவார்.

13 மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதில் அவர்கள் அனைவரும் ஓர் அணியில் உள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறமுடியாது.

வரும் 23ம் தேதி பகத்சிங் பிறந்த தினத்தை மதநல்லிணக்க, மத ஒற்றுமை தினமாகவும் 26 ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை படித்து அதனை பாதுகாப்போம் என உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல் 30 ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினமும் அனுசரிக்கப்படும். நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்" என்றார்.


இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனஸ்டு கட்சி மாநில பொது செயலாளர் பாலகிருஷணன், மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Conclusion:Visual in live kit
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.