ETV Bharat / state

'காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அச்சுறுத்தல்?'

author img

By

Published : Jul 11, 2019, 7:00 PM IST

சென்னை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' சட்டத் திருத்த மசோதா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

stalin

மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தண்ணீர் சிக்கலைத் தீர்த்துவைக்க 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' அமைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' சட்டத் திருத்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்புக்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது.

இதே மசோதா 2017ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகும். ஆனால், அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அமைச்சரவை விடாப்பிடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோன்று, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவாச் சட்டத்தில், நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும் என்றிருந்த விதி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த விதியானது தற்போதைய மசோதாவில் சேர்க்கப்பட்டால், அது மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் சிக்கல்களை நீண்டகாலம் இழுத்தடிக்கும் திட்டமாகிவிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நியாயவிலைக் கடை அட்டை, ஒரே மின்சார விநியோகம், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது அனைத்தையும் மையப்படுத்தும் முயற்சியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தண்ணீர் சிக்கலைத் தீர்த்துவைக்க 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' அமைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' சட்டத் திருத்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்புக்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது.

இதே மசோதா 2017ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகும். ஆனால், அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அமைச்சரவை விடாப்பிடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோன்று, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவாச் சட்டத்தில், நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும் என்றிருந்த விதி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த விதியானது தற்போதைய மசோதாவில் சேர்க்கப்பட்டால், அது மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் சிக்கல்களை நீண்டகாலம் இழுத்தடிக்கும் திட்டமாகிவிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நியாயவிலைக் கடை அட்டை, ஒரே மின்சார விநியோகம், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது அனைத்தையும் மையப்படுத்தும் முயற்சியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:nullBody:ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்”அமைக்கும் சட்ட மசோதாவிற்கு,மத்திய அமைச்சரவை ஒப்புதல்கொடுத்துள்ள செயல், உச்சநீதிமன்றத்தால் இறுதிசெய்யப்பட்டுள்ள காவிரி இறுதித்தீர்ப்பிற்கும், 
அதன்படி அமைக்கப்பட்டுள்ளகாவிரி நதிநீர் மேலாண்மைஆணையத்திற்கும் பாதிப்புஅச்சுறுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை


மாநிலங்களுக்கு இடையில்உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு என்ற முகவுரையுடன், “ஒரேநதிநீர்த் தீர்ப்பாயம்” அமைக்கும் சட்டமசோதாவிற்கு, மத்திய அமைச்சரவைஒப்புதல் கொடுத்துள்ள செயல், உச்சநீதிமன்றத்தால் இறுதிசெய்யப்பட்டுள்ள காவிரி இறுதித்தீர்ப்பிற்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ளகாவிரி நதிநீர் மேலாண்மைஆணையத்திற்கும் பாதிப்பு அச்சுறுத்தலைஏற்படுத்தி விடக்கூடாது என்று எச்சரித்திடக்கடமைப் பட்டிருக்கிறேன். நாடு முழுவதும்உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரேதீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றேமக்களவையில் மசோதா தாக்கல்செய்யப்பட்டு- அப்போதே தமிழகம் உள்ளிட்டபல்வேறு மாநிலங்கள் இதை எதிர்த்தன.ஆனால் விடாப்பிடியாக,அதே மசோதாவைமீண்டும் கொண்டு வருவதற்கு இப்போதுமத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கியிருக்கிறது.

இந்த மசோதாவில், “நடைமுறையில் உள்ள நதி நீர் நடுவர்மன்றங்கள் எல்லாம் கலைக்கப்படும்”என்றும், “அந்த நடுவர் மன்றங்களில்நிலுவையில் உள்ள நதிநீர் தாவாக்கள்புதிதாக உருவாக்கப்படும் தீர்ப்பாயத்திற்குஅனுப்பப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்தாவாச் சட்டத்தில், “நடுவர் மன்றத்தீர்ப்புகளை மத்திய அரசு,  அரசிதழில்வெளியிட வேண்டும்” என்று இருந்த விதி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டமசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது.இப்போது புதிதாக தாக்கல் செய்யப்படும்மசோதாவிலும் அது மாதிரி இருந்தால்-மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நீண்டகாலம் இழுத்தடிக்கும்  வாய்ப்பு திட்டமிட்டுஉருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம்சம்பந்தப்பட்ட  மாநிலங்களில் எழுவதுதவிர்க்க முடியாதது ஆகும். மத்திய அரசுஅரசிதழில் வெளியிட்டு,உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மைஆணையத்தின் உத்தரவையே மதித்துகர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்திறந்து விட மறுக்கிறது. அதைத் தட்டிக்கேட்கவும் இயலாமல்  மத்திய அரசு அரசியல்காரணங்களுக்காக தயங்கி நிற்கிறது.அப்படியிருக்கையில் நடுவர் மன்றத் தீர்ப்பேஅரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமேஇல்லை என்பது எவ்விதத்திலும் நதி நீர்ப்பிரச்சினைய தீர்க்கவும் உதவாது, தண்ணீர்கிடைக்கவும் பயன்படாது என்பதை, மத்தியபா.ஜ.க. அரசு ஏனோ உணரத்தவறியிருப்பது வேதனையளிக்கிறது.

ஆகவே “ஒரே நதி நீர்த்தீர்ப்பாயம்” என்ற போர்வையில்,காவிரிநடுவர் மன்றத் தீர்ப்பையும், அந்தத் தீர்ப்பின்அடிப்படையில் அமைந்துள்ள காவிரிமேலாண்மை ஆணையத்தையும்  கலைத்துஉருக்குலைப்பதற்கு ஒரு கருவியாக மத்தியபா.ஜ.க. அரசு பயன்படுத்தி விடக்கூடாது.அப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தாதுஎன்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றஉறுப்பினர்கள் இந்த மசோதா தாக்கலாகும்போது எச்சரிக்கையாக  இருந்து,  தங்களதுகருத்துக்களை ஆணித்தரமாக உறுதியுடன்எடுத்து வைப்பார்கள் என்பதைத்தெரிவிக்கும் அதே வேளையில், தமிழகஅரசும் உடனடியாக மத்திய அரசுடன்தொடர்பு கொண்டு “ஒரே நதித் நீர்தீர்ப்பாயம்” அமைக்கும் மசோதா, காவிரிஇறுதித் தீர்ப்பிற்கு எந்த விதத்திலும்ஊறுவிளைவித்து விடக்கூடாது என்றுஅழுத்தம் கொடுத்து-

 அதற்கான உறுதிமொழியை மசோதா நிறைவேறும்முன்பு மத்திய அரசிடம் பெற்றிட வேண்டும்என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரேரேஷன் அட்டை,ஒரே மின்சார விநியோகம்,ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது; கூட்டுறவுக்கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு, இயங்குவதாகச் சொல்லிக்கொண்டு; அனைத்தையும் மையப் படுத்தும்முயற்சி, சரியானதுதானா என  சற்றுஎண்ணிப் பார்த்திட வேண்டும்

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.