ETV Bharat / state

சக்தி மசாலாப் பொடியில் புழு: நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் - பிரபல உணவு மசாலா தயாரிக்கும் தனியார்

சென்னை: சக்தி மசாலா நிறுவனத்தின் மசாலாப் பொடியில் புழு இருந்ததால், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Shakti masala distribute expired products
Shakti masala distribute expired products
author img

By

Published : Feb 6, 2020, 10:38 AM IST

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த காமேஷ் என்பவர் சக்தி மசாலா நிறுவனம் தயாரித்த பருப்புப் பொடி பாக்கெட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியுள்ளார். அதைப் பிரித்து பார்த்தபோது, பொடி முழுவதிலும் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட் சென்ற காமேஷ், காலாவதியாக 6 மாதங்கள் இருக்கும் நிலையில் பொடி கெட்டுப்போனது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால், ”விற்பனை செய்வது மட்டுமே நாங்கள், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் முறையிடுங்கள்” என்று சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறினர்.

அதன்பின், சக்தி மசாலா நிறுவனம் மீது மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காமேஷ் புகார் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிண்டியிலுள்ள உணவுப் பகுப்பாய்வகத்தில், புழு இருந்த மசாலாப் பொடியை சோதனைக்கு அனுப்பினார். சோதனையின் முடிவில் அந்த பருப்புப் பொடி பாதுகாப்பற்றது எனவும் அதில் 60 புழுக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனப் பொருளில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (பிப். 04) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சக்தி மசாலா நிறுவனத்தின் தரப்பில் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த காமேஷ் என்பவர் சக்தி மசாலா நிறுவனம் தயாரித்த பருப்புப் பொடி பாக்கெட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியுள்ளார். அதைப் பிரித்து பார்த்தபோது, பொடி முழுவதிலும் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட் சென்ற காமேஷ், காலாவதியாக 6 மாதங்கள் இருக்கும் நிலையில் பொடி கெட்டுப்போனது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால், ”விற்பனை செய்வது மட்டுமே நாங்கள், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் முறையிடுங்கள்” என்று சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறினர்.

அதன்பின், சக்தி மசாலா நிறுவனம் மீது மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காமேஷ் புகார் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிண்டியிலுள்ள உணவுப் பகுப்பாய்வகத்தில், புழு இருந்த மசாலாப் பொடியை சோதனைக்கு அனுப்பினார். சோதனையின் முடிவில் அந்த பருப்புப் பொடி பாதுகாப்பற்றது எனவும் அதில் 60 புழுக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனப் பொருளில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (பிப். 04) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சக்தி மசாலா நிறுவனத்தின் தரப்பில் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

Intro:Body:*பிரபல உணவு தயாரிப்பாளரான சக்தி மசாலா உணவுப் பொருளில் புழு இருப்பதாக கூறி வழக்கறிஞர் புகார்.*

உலகம் முழுவதும் இயங்கி வரும் உணவு தயாரிக்கும் மசாலா நிறுவனமான சக்தி மசாலா.இந்த நிறுவனம் தயார் செய்த 5 பாக்கெட் சக்தி பருப்பு பொடியை கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் காமேஷ் என்பவர் ஐ_பிரெஷ் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த பருப்பு சாதப்பொடியை பிரித்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடும்போது அந்த பொடி முழுவதும் புழு இருந்துள்ளது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இது தொடர்பாக காமேஷ் பொடியை வாங்கிய சூப்பர் மார்க்கெட்டில் கேட்டபோது தயாரிப்பு நிறுவனத்திடம் முறையிடுங்கள் எனவும்,விற்பது மட்டுமே நாங்கள் என கூறியுள்ளனர். மேலும் 12 மாதத்திற்குள் காலாவதி என குறிப்பிட்டு பேக்கிங் செய்த பொருள் காலாவதி ஆவதற்கு இன்னும் 6 மாதம் உள்ள நிலையில் பூச்சி பிடித்து கெட்டுப் போயுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் சக்தி மசாலா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வகத்தில் புழு இருந்த சக்தி மசாலா பொடியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது சோதனையின் முடிவில் அந்த பருப்பு பொடி பாதுகாப்பற்ற உணவு எனவும்160 புழுக்கள் உள்ளதாகவும்,தரமற்ற உணவு எனவும் தெரிவித்திருந்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது சக்தி குழுமத்தில் இருந்து ஒருவரும் ஆஜராகததை நீதிபதி கண்டித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினரும் வாங்கி சமைக்கும் பிரபல சக்தி மசாலா பொடியில் புழு இருப்பதால் பொதுமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.