ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 2:15 PM IST

Updated : Oct 20, 2023, 7:49 PM IST

Senthil Balaji Judicial custody: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 9-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 வரை முதலில் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவரது ஜாமீன் மனு கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 29-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 13-ஆம் தேதி வரை 7-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, 8-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வழக்கு இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர்-3 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அவரது நீதிமன்ற காவல் 9-வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிடிவி தினகரன் திவால் ஆனாரா? புதிய நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 வரை முதலில் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவரது ஜாமீன் மனு கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 29-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 13-ஆம் தேதி வரை 7-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, 8-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வழக்கு இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர்-3 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அவரது நீதிமன்ற காவல் 9-வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிடிவி தினகரன் திவால் ஆனாரா? புதிய நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு

Last Updated : Oct 20, 2023, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.