ETV Bharat / state

வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!

author img

By

Published : Oct 25, 2019, 9:28 AM IST

சென்னை: தேர்தல் அமைப்பு முறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான் ”இடைத்தேர்தலில் பொதுவாக அதிகாரத்தில் உள்ளவர்கள் வெற்றிபெறுவது வழக்கமான ஒன்று. தேர்தல் அமைப்பு முறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். வாக்கு இயந்திர முறையை ஒழித்து வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும். பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கும் பணநாயக முறையை ஒழிக்காமல் நல்ல அரசியலையோ நல்ல அரசையோ நிறுவ முடியாது. பணம் தந்து வாக்கு வாங்கும் முறை இருக்கும் வரை காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களைப் பார்க்க முடியாது” என சீமான் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், ”உலகத்தில் வாக்கு இயந்திர முறையை இந்தியாவும், நைஜீரியாவும் செயல்படுத்துகின்றன. இரண்டு நாடுகளும் ஊழலில் பெருந்த நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சிப், இந்திய எலக்ட்ரானிக் நிறுவனம் இணைந்துதான் வாக்கு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. இதைத் தயாரிக்கும் ஜப்பான் நாடு அவற்றைப் பயன்படுத்துகிறாதா? வளர்ந்துவிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தவில்லை" என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும், "டிஜிட்டல் இந்தியா வந்தபின்னர் மூன்று நாள் கழித்து ஓட்டுகளை ஏன் எண்ணுகின்றனர். 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கு நேரம் மாற்றம் வைத்துள்ளது. ஆனால் வாக்கு சீட்டு முறையில் வாக்குப்பதிவு முடிந்து இரவோடு இரவாக அதிபர் யார் என்பதை ஒரே நாளில் அறிவிக்கிறது. இந்தியாவில் 42 நாட்கள் பள்ளிகளில் பூட்டி வைப்பது ஏன்?" என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ‘நடிகர் விஜய் இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது’ - சீமான் அறிவுரை

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான் ”இடைத்தேர்தலில் பொதுவாக அதிகாரத்தில் உள்ளவர்கள் வெற்றிபெறுவது வழக்கமான ஒன்று. தேர்தல் அமைப்பு முறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். வாக்கு இயந்திர முறையை ஒழித்து வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும். பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கும் பணநாயக முறையை ஒழிக்காமல் நல்ல அரசியலையோ நல்ல அரசையோ நிறுவ முடியாது. பணம் தந்து வாக்கு வாங்கும் முறை இருக்கும் வரை காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களைப் பார்க்க முடியாது” என சீமான் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், ”உலகத்தில் வாக்கு இயந்திர முறையை இந்தியாவும், நைஜீரியாவும் செயல்படுத்துகின்றன. இரண்டு நாடுகளும் ஊழலில் பெருந்த நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சிப், இந்திய எலக்ட்ரானிக் நிறுவனம் இணைந்துதான் வாக்கு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. இதைத் தயாரிக்கும் ஜப்பான் நாடு அவற்றைப் பயன்படுத்துகிறாதா? வளர்ந்துவிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தவில்லை" என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும், "டிஜிட்டல் இந்தியா வந்தபின்னர் மூன்று நாள் கழித்து ஓட்டுகளை ஏன் எண்ணுகின்றனர். 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கு நேரம் மாற்றம் வைத்துள்ளது. ஆனால் வாக்கு சீட்டு முறையில் வாக்குப்பதிவு முடிந்து இரவோடு இரவாக அதிபர் யார் என்பதை ஒரே நாளில் அறிவிக்கிறது. இந்தியாவில் 42 நாட்கள் பள்ளிகளில் பூட்டி வைப்பது ஏன்?" என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ‘நடிகர் விஜய் இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது’ - சீமான் அறிவுரை

Intro:வாக்கு சீட்டு முறையை கொண்டு ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
Body:வாக்கு சீட்டு முறையை கொண்டு ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று உள்ளது. இடைத்தேர்தலில் பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது வழக்கமாக உள்ளது. தேர்தல் அமைப்பு முறையில் நிறை மாற்றங்களை கொண்டு வர வேண்டும். வாக்கு இயந்திர முறையை ஒழித்து வாக்கு சீட்டு முறையை கொண்டு வரப்பட வேண்டும். பணத்தை கொடுத்து வாக்கு வாங்கும் பணநாயக முறையை ஒழிக்காமல் நல்ல அரசியலையோ நல்ல அரசையோ நிறுவ முடியாது. பணம் தந்து வாக்கு வாங்கும் முறை இருக்கும் வரை காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை பார்க்க முடியாது. மறுபடியும் மறுபடியும் வந்து ஊழல் செய்து லஞ்சம் பெறுவார்கள். சுரங்கங்களை விற்று பணத்தை முதலீடு செய்வார்கள். நீர் பஞ்சம், வேளாண்மை செய்யாமல் சாவது, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் போராட்டம், மீனவர்கள் உள்பட எல்லா தரப்பிலும் இருந்து போராட்டங்கள் நடக்கின்றன. எல்லாரும் வீதியில் வந்து போராடும் போது ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சி தருவதாக கூறுகின்றனர். மூன்றரை லட்சம் கோடி கடன் இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனாலும் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி வரை முதலீடு செய்வதாக கூறுகின்றனர். பணம் எப்படி வருகிறது. பணக்காரர்கள் ஏழைகளை சுரண்டினால் வியாபாரம். அதே அரசு சுரண்டினால் வரி. மக்கள் எதிர்த்து போராடினால் வன்முறை. இப்போது இது நடைமுறை. புரட்சிக்கர தூய அரசியலை கொண்டு வர தொடர்ந்து போராடுவோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போராடுவோம்.

வாக்கிற்கு பணம், சேலை தந்தோம் என்று சொல்லுவார்களா.

தேர்தல் ஆணையம் பொது தேர்தலின் போது பற்க்கும் படையை வைத்து பணத்தை பிடித்தார்கள் அல்லவா. தொகுதிகளில் ஒரு அதிகாரி கூட சோதனை நடத்தவில்லையே. வாக்கு இயந்திர முறையை உலகத்தில் இந்தியாவும் நைஜீரியாவும் செயல்படுத்துகிறது. 2 நாடுகளும் ஊழலில் பெருந்த நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சீப், இந்திய எலக்ட்ரானிக் நிறுவனம் இனைந்து தான் வாக்கு இயந்திரத்தை தயாரிக்கிறது. இதை தயாரிக்கும் ஜப்பான் நாடு பயன்படுத்துகிறாதா. உலகத்தில் அறிவியல் அதிகமாக வளர்ந்துவிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வாக்கு சீட்டு முறை தான். ஜனநாயகத்தில் கடைசியாக உள்ளவரின் குரலையும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் எதுவும் எடுப்படவில்லை. வாக்கு இயந்திரம் வேண்டாம் என்றால் தேர்தல் ஆணையம் வாய்ப்பு இல்லை என்று கூறிவிடும். டிஜிட்டல் இந்தியா வந்தபின்னர் 3 நாள் கழித்து ஒட்டுகளை ஏன் எண்ணுகின்றனர். 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கு நேரம் மாற்றம் வைத்து உள்ளது. ஆனால் வாக்கு சீட்டு முறையில் வாக்கு பதிவு முடிந்து இரவோடு இரவாக அதிபர் யார் என்பதை ஒரே நாளில் அறிவிக்கிறது. இந்தியாவில் 42 நாட்கள் பள்ளிகளில் பூட்டி வைப்பது ஏன்?

மக்களை குறை சொல்ல கூடாது. மதிப்புமிக்க வாக்குரிமையை விற்க கூடிய ஏழ்மை, வறுமை நிலையில் வைத்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு. 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.40 கமிஷன் போக மீதமுள்ள ரூ. 60ல் எப்படி குடும்பம் நடத்துவார்கள். ஒரு ஒட்டுக்கு ரூ.2 ஆயிரம் தருகிறீர்கள். தீபாவளி நேரத்தில் எல்லாரும் வாங்குவார்கள்.

உள்ளாட்சி உள்பட எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடுவோம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.