ETV Bharat / state

'நீட் தேர்வு தமிழ்நாட்டில் உயிர்பலி வாங்கும் பலிபீடம்' - எஸ்.டி.பி.ஐ. - நீட் தேர்வு தற்கொலை

சென்னை: மத்திய அரசால் திணிக்கப்படும் நீட் தேர்வு தமிழ்நாட்டில் உயிர்பலி வாங்கும் பலிபீடமாக மாறி வருகிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எஸ்டிபிஐ
எஸ்டிபிஐ
author img

By

Published : Sep 12, 2020, 7:44 PM IST

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு தமிழ்நாடு மாணவர்களின் உயிரை பறிக்கும் பலிபீடமாக மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஆண்டுதோறும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ச்சியாகி வருவதோடு அதிகரித்தும் வருகின்றன. மதுரையில் இன்று (செப்டம்பர் 12) மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது இன்னுயிரை மாய்த்துள்ளார்.

தனது தற்கொலைக்கு நீட் குறித்த பயமும், பெற்றோரின் மருத்துவக் கனவு நீட் தேர்வால் தடைபட்டு போகுமோ என்ற அச்சமும் மாணவியை தற்கொலைக்கு தள்ளியிருப்பது என்பது மாணவி எழுதி வைத்த கடிதம் மற்றும் அவர் பேசிய ஆடியோ மூலம் உறுதியாக தெரிகிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் தனது பெற்றோரின் மருத்துவர் கனவிற்காக கடந்த ஆண்டு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நீட் தேர்வெழுதி அந்த தேர்வில் மாணவி துர்கா தேர்ச்சிபெறவில்லை.

இருப்பினும் மருத்துவக் கல்வி கனவிற்காக மீண்டும் இந்த ஆண்டும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த நிலையில், மாணவி துர்கா தற்கொலை செய்துகொண்டார். “நான் சோர்வடைந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்,” என்று எழுதிவைத்து விட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மாணவி துர்காவின் இந்த வார்த்தைக்கு நிச்சயம் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் தொடங்கி பிரதீபா, சுபஶ்ரீ, சீனிவாசன், கிருஷ்ணசாமி, ரித்து, வைஷியா என நீண்ட நீட் படுகொலைகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் நீட்டின் பெயரால் நிகழ்ந்த மரணங்கள் ஏற்படுத்தும் காயங்கள் வடுவாக இருக்கின்றன. ஒவ்வொரு மரணத்தின் போதும் இதுவே நீட்டின் பெயரால் நடைபெறுகின்ற கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரம் மற்றும் மாநில அரசின் கையாளாகத் தனத்தால் உடைந்து நொறுங்கி போய்விடுகிறது.

நீட்டின் பெயரால் இதுவரை 15 மாணவர்களின் இன்னுயிர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதத்தில் மாணவி சுபஸ்ரீ, மாணவர் விக்னேஷ் மற்றும் மாணவி துர்கா என மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசால் திணிக்கப்படும் நீட் தேர்வு, தமிழ்நாட்டில் உயிர்பலி வாங்கும் பலிபீடமாக மாறி வருகிறது.

நீட்டின் மூலம் தரம் என்ற பெயரில், உயர் கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி வசதிபடைத்த ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைவதும், வசதியற்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் என துரத்தியடிக்கப்படுவதும் தான் நீட்டின் நோக்கமாக உள்ளது என்பதை நடக்கின்ற நிகழ்வுகள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த மரணம் தற்கொலை அல்ல, நீட் எனும் பயங்கரவாத அரக்கனால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனப் படுகொலை. இந்த படுகொலைக்கு தமிழக விரோத மத்திய பாஜக அரசும், தமிழக உரிமையை தக்கவைக்க முடியாத மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு தமிழ்நாடு மாணவர்களின் உயிரை பறிக்கும் பலிபீடமாக மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஆண்டுதோறும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ச்சியாகி வருவதோடு அதிகரித்தும் வருகின்றன. மதுரையில் இன்று (செப்டம்பர் 12) மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது இன்னுயிரை மாய்த்துள்ளார்.

தனது தற்கொலைக்கு நீட் குறித்த பயமும், பெற்றோரின் மருத்துவக் கனவு நீட் தேர்வால் தடைபட்டு போகுமோ என்ற அச்சமும் மாணவியை தற்கொலைக்கு தள்ளியிருப்பது என்பது மாணவி எழுதி வைத்த கடிதம் மற்றும் அவர் பேசிய ஆடியோ மூலம் உறுதியாக தெரிகிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் தனது பெற்றோரின் மருத்துவர் கனவிற்காக கடந்த ஆண்டு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நீட் தேர்வெழுதி அந்த தேர்வில் மாணவி துர்கா தேர்ச்சிபெறவில்லை.

இருப்பினும் மருத்துவக் கல்வி கனவிற்காக மீண்டும் இந்த ஆண்டும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த நிலையில், மாணவி துர்கா தற்கொலை செய்துகொண்டார். “நான் சோர்வடைந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்,” என்று எழுதிவைத்து விட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மாணவி துர்காவின் இந்த வார்த்தைக்கு நிச்சயம் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் தொடங்கி பிரதீபா, சுபஶ்ரீ, சீனிவாசன், கிருஷ்ணசாமி, ரித்து, வைஷியா என நீண்ட நீட் படுகொலைகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் நீட்டின் பெயரால் நிகழ்ந்த மரணங்கள் ஏற்படுத்தும் காயங்கள் வடுவாக இருக்கின்றன. ஒவ்வொரு மரணத்தின் போதும் இதுவே நீட்டின் பெயரால் நடைபெறுகின்ற கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரம் மற்றும் மாநில அரசின் கையாளாகத் தனத்தால் உடைந்து நொறுங்கி போய்விடுகிறது.

நீட்டின் பெயரால் இதுவரை 15 மாணவர்களின் இன்னுயிர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதத்தில் மாணவி சுபஸ்ரீ, மாணவர் விக்னேஷ் மற்றும் மாணவி துர்கா என மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசால் திணிக்கப்படும் நீட் தேர்வு, தமிழ்நாட்டில் உயிர்பலி வாங்கும் பலிபீடமாக மாறி வருகிறது.

நீட்டின் மூலம் தரம் என்ற பெயரில், உயர் கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி வசதிபடைத்த ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைவதும், வசதியற்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் என துரத்தியடிக்கப்படுவதும் தான் நீட்டின் நோக்கமாக உள்ளது என்பதை நடக்கின்ற நிகழ்வுகள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த மரணம் தற்கொலை அல்ல, நீட் எனும் பயங்கரவாத அரக்கனால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனப் படுகொலை. இந்த படுகொலைக்கு தமிழக விரோத மத்திய பாஜக அரசும், தமிழக உரிமையை தக்கவைக்க முடியாத மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.