ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு எப்போது... கல்வித்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Oct 14, 2020, 5:49 PM IST

Updated : Oct 14, 2020, 6:04 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்பட உள்ளன என்பது குறித்து கல்வித்துறை பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Schools reopen, MHC queries
Schools reopen, MHC queries

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள் 75 சதவிகிதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 40 சதவிகிதக் கட்டணமும், மீதத் தொகையை பள்ளிகள் திறந்த பின் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி, மொத்தக் கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கும் பள்ளிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, அந்தப் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஏற்கெனவே தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு ஆனந்தவெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 32 சிபிஎஸ்இ பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக சிபிஎஸ்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு பள்ளிகளைத் திறக்க எப்போது வாய்ப்புள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறும் உத்தரவிட்ட அவர், வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்!

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள் 75 சதவிகிதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 40 சதவிகிதக் கட்டணமும், மீதத் தொகையை பள்ளிகள் திறந்த பின் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி, மொத்தக் கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கும் பள்ளிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, அந்தப் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஏற்கெனவே தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு ஆனந்தவெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 32 சிபிஎஸ்இ பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக சிபிஎஸ்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு பள்ளிகளைத் திறக்க எப்போது வாய்ப்புள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறும் உத்தரவிட்ட அவர், வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்!

Last Updated : Oct 14, 2020, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.