சென்னையில் நேற்று (ஜனவரி 26) செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பார். முன்பு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படும்.
பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும், ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டியுள்ளது" என்றார்.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளைத் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழனாக இருந்தும் தமிழ்த்தாயை மதிக்க மறுப்பவர்களை என்ன செய்வது ? - ராமதாஸ் வேதனை