ETV Bharat / state

ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு!

author img

By

Published : Aug 13, 2021, 10:39 PM IST

விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைப்பதற்காக, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, காவல், மருத்துவம், கல்வித் துறைகள் உள்ளிட்டப் பல்வேறு துறைககளை ஒருங்கிணைத்து மாற்றியமைக்கப்பட உள்ள, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு!
ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள திமுக அரசின், முதல் நிதிநிலை அறிக்கைத் தாக்கல் இன்று (ஆக.13) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாமானிய மக்களின் துயர் துடைக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போது சாலைப் பாதுகாப்புக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்து, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் காணொலி

தீயணைப்புச் சேவைகள் சட்டம் மாற்றம்

இதுகுறித்து அவர் பேசுகையில், 'தீ விபத்துகள் உள்ளிட்டப் பல்வேறு விபத்துகளால் கணிசமான அளவில் பொருளாதார, மனித இழப்புகள் ஏற்படுகின்றன. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, தீ விபத்து பாதுகாப்பு செயலாக்க நடவடிக்கைகள் மூலமாக தீ விபத்துகளைத் தடுக்க அரசு பாடுபடும். இதற்காக தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பு, விபத்துகளற்ற தமிழ்நாடு என்னும் இலக்கை நோக்கிச் செல்வதில் அரசு உறுதியாக உள்ளது. சாலை விபத்து, அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது கணிசமான அளவில் குறைந்திருப்பினும், மொத்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில், கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. இருப்பினும், அப்போது ஏற்றுக்கொள்ள இயலாத வகையில், 45 ஆயிரத்து 489 விபத்துகள், 8 ஆயிரத்து 60 உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

இதனால் விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் குறைப்பதற்காக, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல், மருத்துவம், கல்வித் துறைகள் உள்ளிட்டப் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கமாக மாற்றியமைக்கப்படும்.

மேலும் போக்குவரத்து ஆணையரகமானது, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். இதனை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு ரூ. 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள திமுக அரசின், முதல் நிதிநிலை அறிக்கைத் தாக்கல் இன்று (ஆக.13) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாமானிய மக்களின் துயர் துடைக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போது சாலைப் பாதுகாப்புக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்து, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் காணொலி

தீயணைப்புச் சேவைகள் சட்டம் மாற்றம்

இதுகுறித்து அவர் பேசுகையில், 'தீ விபத்துகள் உள்ளிட்டப் பல்வேறு விபத்துகளால் கணிசமான அளவில் பொருளாதார, மனித இழப்புகள் ஏற்படுகின்றன. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, தீ விபத்து பாதுகாப்பு செயலாக்க நடவடிக்கைகள் மூலமாக தீ விபத்துகளைத் தடுக்க அரசு பாடுபடும். இதற்காக தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பு, விபத்துகளற்ற தமிழ்நாடு என்னும் இலக்கை நோக்கிச் செல்வதில் அரசு உறுதியாக உள்ளது. சாலை விபத்து, அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது கணிசமான அளவில் குறைந்திருப்பினும், மொத்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில், கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. இருப்பினும், அப்போது ஏற்றுக்கொள்ள இயலாத வகையில், 45 ஆயிரத்து 489 விபத்துகள், 8 ஆயிரத்து 60 உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

இதனால் விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் குறைப்பதற்காக, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல், மருத்துவம், கல்வித் துறைகள் உள்ளிட்டப் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கமாக மாற்றியமைக்கப்படும்.

மேலும் போக்குவரத்து ஆணையரகமானது, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். இதனை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு ரூ. 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.