ETV Bharat / state

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

author img

By

Published : Jun 24, 2022, 1:15 PM IST

அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் கட்டாயம் இட ஒதுக்கீட்டை பாடப்பிரிவு வாரியாக (Group-wise) பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு
+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை: மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விகிதம் பாடப்பிரிவு வாரியாக (Group-wise) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும்.

1.பொதுப்பிரிவு - 31%

2. பழங்குடியினர் - 1%

3. ஆதி திராவிடர் 18% (ஆதி திராவிட அருந்ததியர்கள் இருப்பின், 18 % இடங்களிலிருந்து 3% இடங்களை அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்)

4. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 20%

5. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் - 3.5%

6. பிற்படுத்தப்பட்டோர் - 26.5%

மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு
+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு வாரியாக (Group-wise) மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு
+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

மேலும், அனைத்துப் பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

சென்னை: மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விகிதம் பாடப்பிரிவு வாரியாக (Group-wise) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும்.

1.பொதுப்பிரிவு - 31%

2. பழங்குடியினர் - 1%

3. ஆதி திராவிடர் 18% (ஆதி திராவிட அருந்ததியர்கள் இருப்பின், 18 % இடங்களிலிருந்து 3% இடங்களை அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்)

4. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 20%

5. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் - 3.5%

6. பிற்படுத்தப்பட்டோர் - 26.5%

மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு
+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு வாரியாக (Group-wise) மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு
+1 மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

மேலும், அனைத்துப் பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.