ETV Bharat / state

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

author img

By

Published : Sep 23, 2020, 5:45 PM IST

சென்னை: சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

request-nutrition-staff-to-provide-periodic-pay
request-nutrition-staff-to-provide-periodic-pay

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

அவை பின்வருமாறு:

  • சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
  • குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
  • சமையல் அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாயும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஓய்வு பெறும்போது வழங்க வேண்டும்
  • சத்துணவு திட்டத்தில் காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்
  • காலி பணியிடம் நிரப்புவதற்கு முன்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக இடமாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும்
  • சமையல் உதவியாளருக்கு சமையலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்
  • சத்துணவு திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களுக்கு நேரடியாக உணவு சமைத்து வழங்க வேண்டும்
    காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை மாதம் ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை திரும்ப அளிக்க வேண்டும் என சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலர் சமூக நலத்துறை ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் என அவர் அப்போது தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

அவை பின்வருமாறு:

  • சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
  • குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
  • சமையல் அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாயும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஓய்வு பெறும்போது வழங்க வேண்டும்
  • சத்துணவு திட்டத்தில் காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்
  • காலி பணியிடம் நிரப்புவதற்கு முன்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக இடமாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும்
  • சமையல் உதவியாளருக்கு சமையலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்
  • சத்துணவு திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களுக்கு நேரடியாக உணவு சமைத்து வழங்க வேண்டும்
    காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை மாதம் ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை திரும்ப அளிக்க வேண்டும் என சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலர் சமூக நலத்துறை ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் என அவர் அப்போது தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.