சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, அவரது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி, கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் வீட்டு முன்பு ரசிகர்கள் சிலர் தர்ணாவிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று(டிச.31) மதியம் 3.45 மணியளவில் நடிகர் ரஜினியின் ரசிகரான முருகேசன் (55) என்பவர், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றார். போயஸ் கார்டன் ரஜினி வீட்டு முன்பு, அவரது ரசிகர் ஒருவர் திடீரென தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்தி, 108 ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ரஜினி வீட்டு முன்பு ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கட்சி தொடங்கி சிஸ்டத்தை மாற்றும் முன்னரே கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!