ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒருவர் கைது

author img

By

Published : Jan 19, 2020, 5:07 PM IST

Updated : Jan 19, 2020, 7:51 PM IST

சென்னை: வில்சன் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெங்களூருவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் பெங்களூரில் கைது
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் பெங்களூரில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவரை காவல் துறையினர் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இவர்களுக்கு பெங்களூருவில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார், இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த உசேன் செரீஃப் என்பவர் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பயங்கரவாதிகள் சொல்லியதாகக் கூறி, செரீஃபை கியூ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வில்சன் கொலைசெய்யப்படுவதற்கு முன்னதாக, ஏற்கனவே பயங்கரவாத செயல்களுக்கு துணைபோவதாக மூன்று பேரை காவல் துறையினர் பெங்களூருவில் கைதுசெய்திருந்தனர். தற்போது இந்த மூன்று பேருக்கும் வில்சன் கொலையாளிகளான பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவரை காவல் துறையினர் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இவர்களுக்கு பெங்களூருவில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார், இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த உசேன் செரீஃப் என்பவர் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பயங்கரவாதிகள் சொல்லியதாகக் கூறி, செரீஃபை கியூ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வில்சன் கொலைசெய்யப்படுவதற்கு முன்னதாக, ஏற்கனவே பயங்கரவாத செயல்களுக்கு துணைபோவதாக மூன்று பேரை காவல் துறையினர் பெங்களூருவில் கைதுசெய்திருந்தனர். தற்போது இந்த மூன்று பேருக்கும் வில்சன் கொலையாளிகளான பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 19.01.20

தொடரும் கியூ பிரிவு காவல்துறையினரின் விசாரணையில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் பெங்களூரில் கைது..

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சதிச் செயல்களை செயல்படுத்தத் திட்டமிட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மூன்று பேரை ஏற்கனவே பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தமிழகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவர்கள் பெங்களூரில் இருந்த போது இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார், இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பெங்களூரில் கைது செய்யப்பட்ட சமீம் மற்றும் தவ்ஹீத் இருவருக்கும் பெங்களூரில் தனது வீட்டில் தங்க அடைக்கலம் கொடுத்ததாக கூறி பெங்களூரை சேர்ந்த உசேன் சரீப் என்பவரை தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்...

tn_che_03_another_one_arrested_in_q_branch_investigation_script_7204894Conclusion:
Last Updated : Jan 19, 2020, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.