ETV Bharat / state

தொலைக்காட்சி சின்னம்: புதிய தமிழக கட்சி கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Nov 23, 2019, 9:52 PM IST

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

krishnasamy

இதுதொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் பெறாத கட்சியாக தமிழ்நாட்டில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.

அங்கீகாரம் பெறாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுவதால், உரிய அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும், தங்கள் கட்சிக்கு ஒரே சின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புதிய தமிழகம் சார்பில் முன்பே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அளித்த கோரிக்கையை பரிசீலித்து, முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது

இதுதொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் பெறாத கட்சியாக தமிழ்நாட்டில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.

அங்கீகாரம் பெறாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுவதால், உரிய அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும், தங்கள் கட்சிக்கு ஒரே சின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புதிய தமிழகம் சார்பில் முன்பே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அளித்த கோரிக்கையை பரிசீலித்து, முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது

Intro:Body:உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரிய மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், தங்களுடை கட்சி பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சியாக தமிழகத்தில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருவதாகவும், அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுவதால், உரிய அங்கீகாரம் மக்களிடம் இருந்து கிடைக்காமல் போய் விடுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி 65 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட போது, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள் விதிப்படி, தங்கள் கட்சிக்கு போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஒரே சின்னமாக தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை ஒதுக்கியதாகவும், அந்த அடிப்படையில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும், தங்கள் கட்சிக்கு ஒரே சின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பாணையில், தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வகை செய்யும் சலுகைகள் நீக்கப்பட்டிருப்பதாக மனுவில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக புதிய தமிழகம் கட்சி உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை எற்பட்டுள்ளதோடு, அங்கீகாரம் பெறாத கட்சிகளை ஒடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது

மேலும் இந்த புதிய அறிவிப்பாணை வெளியிடும் முன்னதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புதிய தமிழகம் வேறு வேறு சின்னங்கள் ஒதுக்காமல் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்க கோரி கடந்த ஜனவரி மாதம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சி தலைவர் மாநில தேர்தல் ஆணையத்தில் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, முடிவை மனுதாரருக்கு தெரிவிக்கும் படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.