ETV Bharat / state

யாரும் வந்து பார்க்காததால் தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதி!

author img

By

Published : Nov 21, 2019, 3:29 PM IST

சென்னை : உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால் மருத்துவமனையில் பெண் சிறைக்கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

-committed-suicide

வேலூர் துரைப்பாடி சிறைச்சாலையில் கைதியாக இருந்தவர் ராஜம்மாள் (50). இவருக்கு மனநல பிரச்னை இருந்ததால் கடந்த எட்டு மாதங்களாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென்று மருத்துவமனையிலேயே ராஜம்மாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜம்மாளின் தற்கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கடந்த எட்டு மாதங்களாக உறவினர்கள் யாரும் பார்க்க வராததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:அங்கன்வாடி மையம் அருகே பராமரிப்பற்றுக் கிடக்கும் கிணறு - மூட மக்கள் கோரிக்கை!

வேலூர் துரைப்பாடி சிறைச்சாலையில் கைதியாக இருந்தவர் ராஜம்மாள் (50). இவருக்கு மனநல பிரச்னை இருந்ததால் கடந்த எட்டு மாதங்களாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென்று மருத்துவமனையிலேயே ராஜம்மாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜம்மாளின் தற்கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கடந்த எட்டு மாதங்களாக உறவினர்கள் யாரும் பார்க்க வராததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:அங்கன்வாடி மையம் அருகே பராமரிப்பற்றுக் கிடக்கும் கிணறு - மூட மக்கள் கோரிக்கை!

Intro:Body:மன நல மருத்துவமனையில் சிறை கைதி தற்கொலை..

வேலூர் துரைப்பாடி சிறையில் கைதியாக இருப்பவர் ராஜம்மாள் (50).இவருக்கு மனநல பிரச்சனை இருந்து வந்ததால் கடந்த 8 மாதங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் இன்று காலை திடீரென்று தனது வார்ட்டில் துண்டு மூலம் ராஜம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பின்னர் மருத்துவ நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமை செயலக காலனி போலிசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த தற்கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கடந்த 8 மாதமாக உறவினர்கள் யாரும் தன்னை பார்க்கவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.