ETV Bharat / state

'ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அப்பட்டமாக பொய் பேசும் மோடி, அமித் ஷா' - பிருந்தா காரத்!

author img

By

Published : Oct 13, 2019, 5:29 PM IST

சென்னை: 'காஷ்மீர் மக்களின் வாழ்க்கை சகஜமான நிலையில் உள்ளதாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவிப்பது மிகப்பெரிய பொய்' என்று பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

brinda karat

காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தொடர்பான கண்டனக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், 'ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருந்து வந்த 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது ஜனநாயக படுகொலையாகும். இதற்கான எந்தவிதமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் சட்டவிரோதமாக அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் படிக்கக் கூடிய மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை.

மருத்துவமனைக்கு பொதுமக்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைக்கொள்ளாமல் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மற்றும் மற்ற அமைச்சர்களும் ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டன என்று பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘ஒரே இந்தியா, வளமான இந்தியா’ - மோடி தலைமையில் ஆலோசனை!

காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தொடர்பான கண்டனக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், 'ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருந்து வந்த 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது ஜனநாயக படுகொலையாகும். இதற்கான எந்தவிதமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் சட்டவிரோதமாக அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் படிக்கக் கூடிய மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை.

மருத்துவமனைக்கு பொதுமக்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைக்கொள்ளாமல் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மற்றும் மற்ற அமைச்சர்களும் ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டன என்று பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘ஒரே இந்தியா, வளமான இந்தியா’ - மோடி தலைமையில் ஆலோசனை!

Intro:Body:காஷ்மீர் மக்களின் வாழ்க்கை சகஜமான நிலையில் உள்ளதாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவிப்பது மிகப்பெரிய பொய் என்று பிருந்தா காரத் குற்றம் சாட்டி உள்ளார்.


காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தொடர்பான கண்டனக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா கரத் பேசுகையில் :-

இந்தியாவில் ஜனநாயகத்திற்கும் இந்திய அரசிலமைப்பு சட்டத்திற்கும் மதச்சார்பின்மைக்கு மக்களின் உரிமைக்கும் மாநில உரிமைக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை பாதுகாக்க இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஓரணியில் திரண்டு மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விட்டுள்ளார்

ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருந்து வந்த 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது என்பது ஜனநாயக படுகொலை என்றும் அதற்கான எந்தவிதமான விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் சட்டவிரோதமாக அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்

தற்போது ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் படிக்கக் கூடிய மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியவில்லை தேர்வு எழுதி செல்ல முடியவில்லை மருத்துவமனைக்கு பொதுமக்களால் முடியவில்லை. தொலைத் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை மக்களின் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மற்றும் மற்ற அமைச்சர்களும் ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டதாக பல இடங்களில் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்

எனவே நாட்டில் மதச்சார்பின்மைக்கு ஜனநாயகத்திற்கும் மக்களின் அடிப்படை உரிமை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

வருதா பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்கள் பிரதமர் அவர்களுக்கு காஷ்மீர் நிலவரம் குறித்து கடிதமொன்று எழுதியதால் அந்த 6 மாணவர்கள் மீதும் கல்லூரி நிர்வாகம் அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது இதை கடும் கண்டனத்துக்குரியதாகும் அவர்களின் இடைநீக்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதையும் இவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினுடைய திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பேராசிரியர் எம்.எஸ்.ஜவஹருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், மூத்த பத்திரிக்கையாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.