ETV Bharat / state

பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞருக்கு உதவிய ”காக்கும் கரங்கள்” - வைரல் புகைப்படம்!

author img

By

Published : Oct 12, 2019, 1:13 PM IST

கோவளம்: பொய்க்கால் குதிரை நடனக் கலைஞர் நிற்க முடியாமல் தள்ளாடிய போது அருகிலிருந்த காவலர் தனது கையை உயர்த்தி பிடித்து நிற்பதற்கு உதவி செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

police

சீனா அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இரு நாட்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கலாச்சார நிகழ்வுகளும் தடபுடலாக நடைபெற்றுவருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் கோவளம் பகுதியில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திக்கின்றனர். தலைவர்களை வரவேற்பதற்காக தமிழக அரசு சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

police
கொசுக்கடி , குளிரில் வெறும்தரையில் படுத்துறங்கும் காவலர்கள்

பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு மணி நேரம் முன்கூட்டியே நடன கலைஞர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது வெகுநேரமாக நின்றிருந்தால் பொய்க்கால் குதிரை நடனக் கலைஞர் ஒருவர் நிற்க முடியாமல் தள்ளாடினார். அப்போது அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது கையை உயர்த்தி பிடித்து நடனக் கலைஞர் நிற்பதற்கு உதவி செய்தார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

police
காவலர்களின் ”கால்களுக்கும்” கொஞ்சம் ஓய்வு தேவை

ஏற்கனவே வழிநெடுகிலும் இருநாட்டுத் தலைவர்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வந்த காவலர்கள் இரவு சாலையோரங்களில் பாய், போர்வை என எதுவும் இல்லாமல் மண்ணில், கொசுக்கடி மற்றும் குளிரில் படுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரை நெகிழச் செய்தது. தற்போது பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞருக்கு உதவிய இந்த ”காக்கும் கரங்களுக்கு” இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

இதையும் படிங்க:மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!

சீனா அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இரு நாட்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கலாச்சார நிகழ்வுகளும் தடபுடலாக நடைபெற்றுவருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் கோவளம் பகுதியில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திக்கின்றனர். தலைவர்களை வரவேற்பதற்காக தமிழக அரசு சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

police
கொசுக்கடி , குளிரில் வெறும்தரையில் படுத்துறங்கும் காவலர்கள்

பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு மணி நேரம் முன்கூட்டியே நடன கலைஞர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது வெகுநேரமாக நின்றிருந்தால் பொய்க்கால் குதிரை நடனக் கலைஞர் ஒருவர் நிற்க முடியாமல் தள்ளாடினார். அப்போது அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது கையை உயர்த்தி பிடித்து நடனக் கலைஞர் நிற்பதற்கு உதவி செய்தார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

police
காவலர்களின் ”கால்களுக்கும்” கொஞ்சம் ஓய்வு தேவை

ஏற்கனவே வழிநெடுகிலும் இருநாட்டுத் தலைவர்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வந்த காவலர்கள் இரவு சாலையோரங்களில் பாய், போர்வை என எதுவும் இல்லாமல் மண்ணில், கொசுக்கடி மற்றும் குளிரில் படுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரை நெகிழச் செய்தது. தற்போது பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞருக்கு உதவிய இந்த ”காக்கும் கரங்களுக்கு” இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

இதையும் படிங்க:மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!

Intro:Body:காக்கும் கரங்கள்

சீனா அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இரு நாட்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கலாச்சார நிகழ்வுகளும் தடபுடலாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆயிர கணக்கான காவலர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபருக்கு கவர்னர், முதல்வர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் ஆகியவற்றை சிறிது நேரம் நின்று சீன அதிபர் ரசித்தார். இதேபோல மகாபலிபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களும் பஞ்ச ரதம் கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் சந்தித்து பேசி நேற்று இரவு தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்தனர். மீண்டும் இன்று காலை கோவளம் பகுதியில் பிரதமர் மோடியை சீன அதிபர் சந்திக்கவுள்ளார். இதற்காக தமிழக அரசு சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு மணி நேரம் முன்கூட்டியே நடன கலைஞர்கள் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இதில் பொய்க்கால் நடன கலைஞரால் தொடர்ந்து நிற்க முடியவில்லை. இதனால் அருகிலிருந்த காவலர் தனது கையை உயர்த்தி பிடித்து அவருக்கு 'சப்போர்ட்' செய்தார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வழிநெடுகிலும் இருநாட்டு தலைவர்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்தும் வந்து இருக்கும் காவலர்கள் இரவு சாலையோரங்களில் பாய், போர்வை என விரிப்பு எதுவும் இல்லாமல் மண்ணில், கொசுக்கடி மற்றும் குளிரில் படுத்திருந்தது காண்போரை நெகிழச் செய்தது. இந்நிலையில் தற்போது பொய்க்கால் ஆட்ட கலைஞருக்கு உதவிய இந்த 'காக்கும் கரங்களுக்கு' பாராட்டு குவிந்து வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.