ETV Bharat / state

விடுதி மேலாளரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர் கைது!

author img

By

Published : Mar 13, 2023, 12:41 PM IST

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தங்கும் விடுதி மேலாளரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

che
che

சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் சோழம்பேடு சாலையில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேலன்(29) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதே விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சோனு என்கிற சஞ்சிவ் சக்கரவர்த்தி(36) ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதால் சோனு குடித்துவிட்டு தங்கும் விடுதியில் சத்தமாக பாட்டு வைத்து கத்திக்கொண்டு நடனம் ஆடியுள்ளார். இதைப் பார்த்த விடுதி மேலாளர் கதிர்வேலன் சோனுவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சோனு விடுதி மேலாளர் கதிர்வேலனை காய்கறி வெட்டும் கத்தியால் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பின்னர் சோனு தனது இடது கை நரம்பை தானே அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் பிரசாத், கதிரேசன் ஆகிய இருவரும் விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார், விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று(மார்ச்.12) இரவு சிகிச்சை முடிந்து சோனு வீடு திரும்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சென்று சோனுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சோனு, தான் போதையில் இருந்ததாகவும், அதனால் விடுதி மேலாளரை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வட மாநிலங்களில் வசந்த காலத்தை வண்ண மயமாக வரவேற்கும் விதமாக ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது, ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவியும், தண்ணீர் ஊற்றியும் கொண்டாடுவர். பொதுவாக வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இப்பண்டிகை, வட மாநிலத்தினர் புலம்பெயர்வால் பெரும்பாலான மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஹோலிப்பண்டிகை களைகட்டியது. சென்னை நகரம் முழுவதும் வண்ண மயமாக காட்சியளித்தது. ஹோலிப்பண்டிகையில் கொண்டாட்டங்களோடு சில குற்ற நிகழ்வுகளும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹோலிப்பண்டிகையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதால், சில இளைஞர்கள் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

கலர் பொடி பூசுவதாகக் கூறி பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த ஆண்டு டெல்லியில் ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: "இந்தியாவை வெறுத்துவிட முடியாது" - பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பான் இளம்பெண் விளக்கம்!

சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் சோழம்பேடு சாலையில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேலன்(29) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதே விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சோனு என்கிற சஞ்சிவ் சக்கரவர்த்தி(36) ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதால் சோனு குடித்துவிட்டு தங்கும் விடுதியில் சத்தமாக பாட்டு வைத்து கத்திக்கொண்டு நடனம் ஆடியுள்ளார். இதைப் பார்த்த விடுதி மேலாளர் கதிர்வேலன் சோனுவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சோனு விடுதி மேலாளர் கதிர்வேலனை காய்கறி வெட்டும் கத்தியால் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பின்னர் சோனு தனது இடது கை நரம்பை தானே அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் பிரசாத், கதிரேசன் ஆகிய இருவரும் விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார், விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று(மார்ச்.12) இரவு சிகிச்சை முடிந்து சோனு வீடு திரும்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சென்று சோனுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சோனு, தான் போதையில் இருந்ததாகவும், அதனால் விடுதி மேலாளரை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வட மாநிலங்களில் வசந்த காலத்தை வண்ண மயமாக வரவேற்கும் விதமாக ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது, ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவியும், தண்ணீர் ஊற்றியும் கொண்டாடுவர். பொதுவாக வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இப்பண்டிகை, வட மாநிலத்தினர் புலம்பெயர்வால் பெரும்பாலான மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஹோலிப்பண்டிகை களைகட்டியது. சென்னை நகரம் முழுவதும் வண்ண மயமாக காட்சியளித்தது. ஹோலிப்பண்டிகையில் கொண்டாட்டங்களோடு சில குற்ற நிகழ்வுகளும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹோலிப்பண்டிகையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதால், சில இளைஞர்கள் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

கலர் பொடி பூசுவதாகக் கூறி பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த ஆண்டு டெல்லியில் ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: "இந்தியாவை வெறுத்துவிட முடியாது" - பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பான் இளம்பெண் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.