ETV Bharat / state

சைதாப்பேட்டையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் மரணம்; இருவர் கைது! - chennai murder news

சென்னை: சைதாப்பேட்டையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சந்தேக மரணம்
சைதாப்பேட்டையில் வாலிபர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்; இருவர் கைது
author img

By

Published : Sep 9, 2020, 6:59 PM IST

சென்னை சைதாப்பேட்டை ரங்கராஜபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்த சந்திரனின் மகன் வெங்கடேசன்(25). வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்றிரவு (செப்டம்பர் 8) தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, வெங்கடபுரத்தைச் சேர்ந்த சிலர் அங்கு காரை நிறுத்தினர். பின்னர் அந்த நபர்கள் காரை பின்பக்கமாக இயக்கியபோது வெங்கடேசன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நபர்களிடம் வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அருகிலிருந்த பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அப்பு மற்றும் அவரது மகன்களான மதன்(22), ராஜி ஆகியோர் சமாதானம் செய்து வைக்க முயன்றனர். அப்போது, வெங்கடேசன் மதனின் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மதன், அப்பு ஆகியோர் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கினர். இதில், மயக்கமடைந்து விழுந்த வெங்கடேசனை அவரது நண்பர்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்த வெங்கடேசனை படுக்கையில் உறங்க வைத்து விட்டு நண்பர்கள் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 9) காலை வெங்கடேசனின் தாயார் பானு நீண்ட நேரமாக உறங்கி கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு வெங்கடேசனை எழுப்பினார்.

ஆனால், வெங்கடேசன் மயங்கிய நிலையில் இருந்ததால் உடனே ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசனை சோதித்து பார்த்த செவிலியர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படும் அப்பு, மதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் முன்பகையால் கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

சென்னை சைதாப்பேட்டை ரங்கராஜபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்த சந்திரனின் மகன் வெங்கடேசன்(25). வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்றிரவு (செப்டம்பர் 8) தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, வெங்கடபுரத்தைச் சேர்ந்த சிலர் அங்கு காரை நிறுத்தினர். பின்னர் அந்த நபர்கள் காரை பின்பக்கமாக இயக்கியபோது வெங்கடேசன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நபர்களிடம் வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அருகிலிருந்த பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அப்பு மற்றும் அவரது மகன்களான மதன்(22), ராஜி ஆகியோர் சமாதானம் செய்து வைக்க முயன்றனர். அப்போது, வெங்கடேசன் மதனின் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மதன், அப்பு ஆகியோர் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கினர். இதில், மயக்கமடைந்து விழுந்த வெங்கடேசனை அவரது நண்பர்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்த வெங்கடேசனை படுக்கையில் உறங்க வைத்து விட்டு நண்பர்கள் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 9) காலை வெங்கடேசனின் தாயார் பானு நீண்ட நேரமாக உறங்கி கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு வெங்கடேசனை எழுப்பினார்.

ஆனால், வெங்கடேசன் மயங்கிய நிலையில் இருந்ததால் உடனே ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசனை சோதித்து பார்த்த செவிலியர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படும் அப்பு, மதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் முன்பகையால் கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.