தமிழ்நாட்டில், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி அரசு, தனியார் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்காக இயக்கும் பேருந்துகளிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தலாம்.
குளிர்சாதனப் பேருந்துகளில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். 50 விழுக்காட்டுக்கு மேல் புதிய காற்றுச் சுழற்சி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் நோயுற்றோர், 65 வயதுக்கு மேற்பட்டோரைக் குளிர்சாதனப் பேருந்தில் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் விநியோகம்