ETV Bharat / state

சென்னை, காஞ்சிபுரத்தில் 6 இடங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

author img

By

Published : Mar 30, 2023, 6:49 AM IST

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடையாறு உபவடி நிலத்தில் போரூர், கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பினை நிரந்தரமாக தடுக்க 6 வெள்ளத் தடுப்பு பணிகள் ரூ.88 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சட்டமன்ற பேரவை கூட்டத்தில் புதன்கிழமை அன்று நீர்வளத்துறை 2023-24 ஆண்டுக்கான 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அதில்,

1. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்க ஏதுவாக நீர் வழித்தடங்களில் பருவமழைக்கும் முந்தைய பராமரிப்பு பணிகள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடையாறு உபவடி நிலத்தில் போரூர் கெருகம்பாக்கம் கொளப்பாக்கம் மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பினை நிரந்தரமாக தடுக்க 6 வெள்ள தடுப்பு பணிகள் ரூபாய் 88 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

3. பெருநகர சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக சென்னை மாவட்டத்தில் கொசஸ்த்தலை ஆறு உபவடிநிலத்திற்கு உட்பட்ட மாதவரம் ரெட்டேரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற ரூபாய் 44 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படும்.

4. செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படையிலான 2 வெள்ள தணிப்பு பணிகள் ரூபாய் 106 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

5. கடலூர் திருச்சி மயிலாடுதுறை விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படையிலான 7 வெள்ள தணிப்பு பணிகள் ரூபாய் 58 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் பழைய இரும்பு கதவுகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் அதன் முதற்கட்டமாக நடப்பாண்டில் 17 அணைகளில் கதவுகள் மற்றும் அணை இயக்கத் தேவையான இயந்திர பாகங்கள் மற்றும் மின்சார தொடர்பு சாதனங்கள் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் ரூபாய் 34 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

7. கோயம்புத்தூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் ரூபாய் 70 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

8. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவி கரம்பை கிராமத்தில் கல்லுகுளம் வாரியில் ஒரு புதிய அணைக்கட்டு அமைக்கும் பணி ரூபாய் 3 கோடி 52 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

9. 22 மாவட்டங்களில் 123 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் செப்பனிடுதல் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு தலைப்பில் பணிகள் ரூபாய் 100 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

10. ஏழு மாவட்டங்களில் புதிய பெரிய பாசன திட்டங்களுக்கு ஆய்வு மற்றும் மட்ட அளவுகள் எடுக்கும் பணி மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

11. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இரண்டு இடங்களில் கடல் நீர் உட்புகளை தடுக்கும் பொருட்டு கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கும் பணிகள் ரூபாய் 13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

12. கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நான்கு இடங்களில் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் தரைப் பாலங்கள் கரைகளில் சாலை நடைபாதை அமைக்கும் பணிகள் ரூபாய் 49 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

13. 8135. 48 ஏக்கர் ஆயக்கட்டுப்பகுதிகள் பயன்படும் விதமாக பாசன நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக 2 மாவட்டங்களில் 3 புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள் ரூபாய் 12 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

14. சென்னை மண்டலத்தில் வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு கட்டுமானம் மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 13 பணிகள் ரூபாய் 129 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

15. திருச்சி மண்டலத்தில் நாகப்பட்டினம்,, சேலம், கரூர், பெரம்பலூர், திருச்சி தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 12 பணிகள் ரூபாய் 58 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

16. கோயம்புத்தூர் மண்டலத்தில் திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் கரூர் ஆகிய மாவட்டங்களில் பாச அமைப்புகளில் புனரமைப்பு மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 8 பணிகள் ரூபாய் 39 கோடியே மூன்று லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

17. மதுரை மண்டலத்தில், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாசனக் அமைப்புகளில் புனரமைப்பு புதுப்பித்தல் மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 16 பணிகள் ரூபாய் 58 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

18.வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி செங்குன்றம், நீர்த்தேக்கங்களில் உள்ள வெள்ளை கதவுகளின் இயக்கம் சிறப்பு மென்பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப்படும். இப்பணி ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.

சென்னை: சட்டமன்ற பேரவை கூட்டத்தில் புதன்கிழமை அன்று நீர்வளத்துறை 2023-24 ஆண்டுக்கான 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அதில்,

1. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்க ஏதுவாக நீர் வழித்தடங்களில் பருவமழைக்கும் முந்தைய பராமரிப்பு பணிகள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடையாறு உபவடி நிலத்தில் போரூர் கெருகம்பாக்கம் கொளப்பாக்கம் மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பினை நிரந்தரமாக தடுக்க 6 வெள்ள தடுப்பு பணிகள் ரூபாய் 88 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

3. பெருநகர சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக சென்னை மாவட்டத்தில் கொசஸ்த்தலை ஆறு உபவடிநிலத்திற்கு உட்பட்ட மாதவரம் ரெட்டேரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற ரூபாய் 44 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படும்.

4. செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படையிலான 2 வெள்ள தணிப்பு பணிகள் ரூபாய் 106 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

5. கடலூர் திருச்சி மயிலாடுதுறை விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படையிலான 7 வெள்ள தணிப்பு பணிகள் ரூபாய் 58 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் பழைய இரும்பு கதவுகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் அதன் முதற்கட்டமாக நடப்பாண்டில் 17 அணைகளில் கதவுகள் மற்றும் அணை இயக்கத் தேவையான இயந்திர பாகங்கள் மற்றும் மின்சார தொடர்பு சாதனங்கள் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் ரூபாய் 34 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

7. கோயம்புத்தூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் ரூபாய் 70 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

8. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவி கரம்பை கிராமத்தில் கல்லுகுளம் வாரியில் ஒரு புதிய அணைக்கட்டு அமைக்கும் பணி ரூபாய் 3 கோடி 52 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

9. 22 மாவட்டங்களில் 123 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் செப்பனிடுதல் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு தலைப்பில் பணிகள் ரூபாய் 100 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

10. ஏழு மாவட்டங்களில் புதிய பெரிய பாசன திட்டங்களுக்கு ஆய்வு மற்றும் மட்ட அளவுகள் எடுக்கும் பணி மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

11. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இரண்டு இடங்களில் கடல் நீர் உட்புகளை தடுக்கும் பொருட்டு கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கும் பணிகள் ரூபாய் 13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

12. கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நான்கு இடங்களில் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் தரைப் பாலங்கள் கரைகளில் சாலை நடைபாதை அமைக்கும் பணிகள் ரூபாய் 49 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

13. 8135. 48 ஏக்கர் ஆயக்கட்டுப்பகுதிகள் பயன்படும் விதமாக பாசன நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக 2 மாவட்டங்களில் 3 புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள் ரூபாய் 12 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

14. சென்னை மண்டலத்தில் வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு கட்டுமானம் மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 13 பணிகள் ரூபாய் 129 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

15. திருச்சி மண்டலத்தில் நாகப்பட்டினம்,, சேலம், கரூர், பெரம்பலூர், திருச்சி தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 12 பணிகள் ரூபாய் 58 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

16. கோயம்புத்தூர் மண்டலத்தில் திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் கரூர் ஆகிய மாவட்டங்களில் பாச அமைப்புகளில் புனரமைப்பு மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 8 பணிகள் ரூபாய் 39 கோடியே மூன்று லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

17. மதுரை மண்டலத்தில், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாசனக் அமைப்புகளில் புனரமைப்பு புதுப்பித்தல் மற்றும் மறு கட்டுமானம் செய்யும் 16 பணிகள் ரூபாய் 58 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

18.வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி செங்குன்றம், நீர்த்தேக்கங்களில் உள்ள வெள்ளை கதவுகளின் இயக்கம் சிறப்பு மென்பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப்படும். இப்பணி ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.