ETV Bharat / state

ஓட்டைப்போட்டு தங்கத்தை ஆட்டைப்போட்ட கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

author img

By

Published : Mar 4, 2023, 3:37 PM IST

Updated : Mar 4, 2023, 4:49 PM IST

பெரம்பூர் நகைக்கடையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெங்களூருவில் வைத்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகை கடையில் ஓட்டை போட்டு திருட்டு
நாகை கடையில் ஓட்டை போட்டு திருட்டு

சென்னை: பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல். கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையில் ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை ஒரு கொள்ளை கும்பல் வெல்டிங் மிஷின் மூலமாக கடையை ஓட்டை போட்டு உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் என்று 6 கோடி மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்து சென்றது. அதோடு நகைக்கடையில் இருந்த சிசிடிவி, டிவிஆர் கருவிகளையும் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைத்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலியான நம்பர் பிளேட், மங்கி குல்லா, கையுறை அணிந்து வந்து கொள்ளையடித்ததால் கைரேகை சோதனையிலும் துப்பு கிடைக்கவில்லை.

சிசிடிவி கேமராக்களில் சிக்காத வண்ணம் சாலையை தேர்ந்தெடுத்து சென்றதால் அவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரமும் தனிப்படை போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆந்திரா செல்லும் வழியில் இவர்கள் சென்ற கார் சிசிடிவியில் பதிவானதால், அதனை வைத்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா எனப் பல மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதே போன்ற பாணியில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடித்தும் விசாரித்து வந்தனர். ஆனாலும், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குற்றவாளிகள் பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

பல மாநிலங்களுக்கு சென்று இதே போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி விசாரிக்கும் பணிகளில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 4 தினங்களுக்கு முன்பாக பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது சந்தேகப்படும்படி வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்த போது, அவர்களிடம் 2.5 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அது பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்டீபன், கங்காதரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த சிறிய துப்புகூட கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சென்னை போலீசார் வேறு வழியின்றி சிசிடிவி காட்சிகளில் சிக்கிய கொள்ளையர்களின் புகைப்படங்களை மற்ற மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். சென்னை போலீசார் அனுப்பிய புகைப்படங்களும் பெங்களூருவில் போலீசார் பிடித்து சிறையில் வைத்திருந்த குற்றவாளிகளும் ஒரே நபர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பெங்களூரு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, கர்நாடகா மற்றும் சென்னை பகுதிகளில் கொள்ளையடித்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றதாக கொடுத்த தகவலின் பேரில், திவாகரன் மற்றும் கஜேந்திரன் ஆகிய மேலும் இருவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

சென்னை போலீசாரின் விசாரணையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் திவாகர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே, பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது. கங்காதரன் மற்றும் ஸ்டீபன் என்பதும் தெரிய வந்தது. சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் என்பதும் பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மொத்த நபர்களும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்படுவதற்கு முன் கொள்ளையர்கள் ஒரு மாத காலம் நோட்டமிட்டு வாட்ச் மேன் இல்லாத கடையாக பார்த்தும், போலீஸ் ரோந்து செல்லும் நேரம் குறித்தும் உளவு பார்த்து வந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது கங்காதரன் என்பதும் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள திவாகர் தவிர மற்ற அனைவர் மீதும் இதே பாணி கொள்ளை வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

குறிப்பாக பள்ளி படிப்பைக்கூட முடிக்காத இவர்கள் கொள்ளையடிக்கும் போது தடயம் சிக்காமல் எப்படி கொள்ளையடிப்பது என்பதில் பயிற்சி எடுத்து வந்துள்ளனர். ஐடிஐ வெல்டிங் கோர்ஸ் படித்துள்ள கொள்ளை கும்பல் தலைவன் கங்காதரன் அதன் மூலமாக உடனடியாக வெல்டிங் செய்து வழியை ஏற்படுத்தி கொள்ளையடிக்க திட்டம் வகுத்து கொடுத்து வந்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன் சென்னை வந்த இவர்கள் நேரடியாக கோயம்புத்தூர் சென்று அங்கு ஒரு காரை திருடிச் சென்று, ஆந்திரா மாநிலத்தில் திருடப்பட்ட ஒரு காரின் பதிவு ஆவணங்களை மாற்றி சென்னையில் வந்து திருடிச் சென்றுள்ளனர்.

பெரம்பூர் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு நபர்களை பெங்களூரு போலீசார் கைது செய்த நிலையில் 2 1/2 கிலோ தங்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இனோவா காரையும் பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தற்போது கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகிய இருவரை சென்னை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும், இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கும் அருண் மற்றும் கௌதம் ஆகிய இருவரை பெங்களூரு போலீசார் மற்றும் சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் கோவாவில் 13 மாடல் அழகிகளுடன் உல்லாசம் - முக்கிய குற்றவாளி சிக்கிய கதை!

சென்னை: பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல். கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையில் ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை ஒரு கொள்ளை கும்பல் வெல்டிங் மிஷின் மூலமாக கடையை ஓட்டை போட்டு உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் என்று 6 கோடி மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்து சென்றது. அதோடு நகைக்கடையில் இருந்த சிசிடிவி, டிவிஆர் கருவிகளையும் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைத்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலியான நம்பர் பிளேட், மங்கி குல்லா, கையுறை அணிந்து வந்து கொள்ளையடித்ததால் கைரேகை சோதனையிலும் துப்பு கிடைக்கவில்லை.

சிசிடிவி கேமராக்களில் சிக்காத வண்ணம் சாலையை தேர்ந்தெடுத்து சென்றதால் அவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரமும் தனிப்படை போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆந்திரா செல்லும் வழியில் இவர்கள் சென்ற கார் சிசிடிவியில் பதிவானதால், அதனை வைத்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா எனப் பல மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதே போன்ற பாணியில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடித்தும் விசாரித்து வந்தனர். ஆனாலும், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குற்றவாளிகள் பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

பல மாநிலங்களுக்கு சென்று இதே போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி விசாரிக்கும் பணிகளில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 4 தினங்களுக்கு முன்பாக பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது சந்தேகப்படும்படி வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்த போது, அவர்களிடம் 2.5 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அது பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்டீபன், கங்காதரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த சிறிய துப்புகூட கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சென்னை போலீசார் வேறு வழியின்றி சிசிடிவி காட்சிகளில் சிக்கிய கொள்ளையர்களின் புகைப்படங்களை மற்ற மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். சென்னை போலீசார் அனுப்பிய புகைப்படங்களும் பெங்களூருவில் போலீசார் பிடித்து சிறையில் வைத்திருந்த குற்றவாளிகளும் ஒரே நபர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பெங்களூரு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, கர்நாடகா மற்றும் சென்னை பகுதிகளில் கொள்ளையடித்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றதாக கொடுத்த தகவலின் பேரில், திவாகரன் மற்றும் கஜேந்திரன் ஆகிய மேலும் இருவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

சென்னை போலீசாரின் விசாரணையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் திவாகர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே, பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது. கங்காதரன் மற்றும் ஸ்டீபன் என்பதும் தெரிய வந்தது. சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் என்பதும் பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மொத்த நபர்களும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்படுவதற்கு முன் கொள்ளையர்கள் ஒரு மாத காலம் நோட்டமிட்டு வாட்ச் மேன் இல்லாத கடையாக பார்த்தும், போலீஸ் ரோந்து செல்லும் நேரம் குறித்தும் உளவு பார்த்து வந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது கங்காதரன் என்பதும் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள திவாகர் தவிர மற்ற அனைவர் மீதும் இதே பாணி கொள்ளை வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

குறிப்பாக பள்ளி படிப்பைக்கூட முடிக்காத இவர்கள் கொள்ளையடிக்கும் போது தடயம் சிக்காமல் எப்படி கொள்ளையடிப்பது என்பதில் பயிற்சி எடுத்து வந்துள்ளனர். ஐடிஐ வெல்டிங் கோர்ஸ் படித்துள்ள கொள்ளை கும்பல் தலைவன் கங்காதரன் அதன் மூலமாக உடனடியாக வெல்டிங் செய்து வழியை ஏற்படுத்தி கொள்ளையடிக்க திட்டம் வகுத்து கொடுத்து வந்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன் சென்னை வந்த இவர்கள் நேரடியாக கோயம்புத்தூர் சென்று அங்கு ஒரு காரை திருடிச் சென்று, ஆந்திரா மாநிலத்தில் திருடப்பட்ட ஒரு காரின் பதிவு ஆவணங்களை மாற்றி சென்னையில் வந்து திருடிச் சென்றுள்ளனர்.

பெரம்பூர் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு நபர்களை பெங்களூரு போலீசார் கைது செய்த நிலையில் 2 1/2 கிலோ தங்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இனோவா காரையும் பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தற்போது கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகிய இருவரை சென்னை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும், இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கும் அருண் மற்றும் கௌதம் ஆகிய இருவரை பெங்களூரு போலீசார் மற்றும் சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் கோவாவில் 13 மாடல் அழகிகளுடன் உல்லாசம் - முக்கிய குற்றவாளி சிக்கிய கதை!

Last Updated : Mar 4, 2023, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.