ETV Bharat / state

பாதையை மறைத்து மணல் கொட்டிய மெட்ரோ நிர்வாகம்: பொதுமக்கள் எதிர்ப்பு..!

author img

By

Published : Nov 17, 2019, 2:23 AM IST

சென்னை: ஆலந்தூரில் ரயில் நிலையம் அருகே உள்ள பாதையை மறைத்து மணல் கொட்டியுள்ள மெட்ரோ நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதையை மறைத்து கொட்டிக்கிடக்கும் மணல்

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள பாதையை பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பாதை மெட்ரோ ரயில் நிலையத் தூண்களுக்கு இடையே செல்கிறது. இந்தப் பாதையை கையகப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு பாதையை மூடும் முயற்சியில் மெட்ரோ நிர்வாகம் செயல்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 14ஆம் தேதி இரவு மெட்ரோ நிர்வாகம், அந்த பாதை முழுவதும் மண்னை கொட்டி யாரும் செல்ல முடியாத வகையில் மூடியதாக கூறப்படுகிறது.

பாதையை மறைத்து கொட்டப்பட்டுள்ள மணல் குவியல்

இதனையறிந்த அப்பகுதி மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தா.மோ. அன்பரசன் தலைமையிலான அனைத்துக் கட்சியினர் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்து போடப்பட்ட மணல் குவியல்களை உடனே அகற்றவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அங்குவந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : குடிநீர் பஞ்சத்தை போக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்..!

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள பாதையை பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பாதை மெட்ரோ ரயில் நிலையத் தூண்களுக்கு இடையே செல்கிறது. இந்தப் பாதையை கையகப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு பாதையை மூடும் முயற்சியில் மெட்ரோ நிர்வாகம் செயல்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 14ஆம் தேதி இரவு மெட்ரோ நிர்வாகம், அந்த பாதை முழுவதும் மண்னை கொட்டி யாரும் செல்ல முடியாத வகையில் மூடியதாக கூறப்படுகிறது.

பாதையை மறைத்து கொட்டப்பட்டுள்ள மணல் குவியல்

இதனையறிந்த அப்பகுதி மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தா.மோ. அன்பரசன் தலைமையிலான அனைத்துக் கட்சியினர் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்து போடப்பட்ட மணல் குவியல்களை உடனே அகற்றவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அங்குவந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : குடிநீர் பஞ்சத்தை போக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்..!

Intro:ஆலந்தூரில் ரெயில் நிலையம் அருகே உள்ள பாதையை அடைக்க மெட்ரோ ரெயில்வே மணல் கொட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்புBody:ஆலந்தூரில் ரெயில் நிலையம் அருகே உள்ள பாதையை அடைக்க மெட்ரோ ரெயில்வே மணல் கொட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் இடையே வாகனங்கள் மட்டும் பொதுமக்கள் எளிதாக கடக்க பாதை இருந்து வருகிறது. ஆலந்தூர் சுற்று வட்டார பகுதிக்கு செல்ல வழிப்பாதையாக இருந்ததால் இதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

அந்த வழி பாதை மெட்ரோ ரெயில்வே தூண்களுக்கு இடையே தான் செல்கிறது. மெட்ரோ நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு வழி பாதையை மூட முயற்சி நடந்தது.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டத்தை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் அந்த வழி பாதை முழுவதும் மண் கொட்டி யாரும் செல்ல முடியாத வகையில் மூடியதாக கூறப்படுகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தா.மோ. அன்பரசன், வியாபாரிகள், வக்கீல்கள், திமுக, மதிமுக நிர்வாகிகள் சென்று பாதையை அடைத்து போடப்பட்ட மணல் குவியல்களை உடனே அகற்றப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் முருகன், பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் சங்கர நாராயணன், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேசினார்கள். பொதுமக்கள் செல்ல கூடிய வகையில் மீண்டும் பாதையை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திமுக எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். இது தொடர்பாக

மெட்ரோ ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி மணல்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.