ETV Bharat / state

'கரோனா குறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்'

author img

By

Published : Mar 27, 2020, 7:12 PM IST

சென்னை: கரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்  மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்  people contact the control room for corona doubts  கரோனா கட்டுப்பாட்டு அறை  corona control room
கரோனா குறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்

சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகள் கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கின்றன. கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதலமைச்சர் கூறியது போல 'வீட்டில் இருங்கள், விலகி இருங்கள், விழிப்புடன் இருங்கள்'.

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார். மூத்த அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பணிக் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது. இந்தியா பல சவால்களை சந்தித்திருக்கிறது. ஒழிக்க முடியாது என்று சொன்ன பெரியம்மையை ஒழித்துவிட்டோம். போலியோவையும் ஒழித்துக் காட்டினோம். எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா திறன் பெற்றிருக்கிறது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகள் கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கின்றன- அமைச்சர் ஜெயக்குமார்

கண்ணுக்குத் தெரியாதது இந்த கரோனா வைரஸ். கரோனா வைரஸ் முதல் நிலை, இரண்டாம் நிலையை கடந்து மூன்றாம் நிலையான சமூகப் பரவலை அடைந்துள்ளது. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து 3 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். அதன் மூலம், நாம் மூன்றாவது கட்டத்துக்கு செல்லவிடாமல் தடுக்க முடியும். கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கென தமிழ்நாடு அரசு 3,850 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மக்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு 24 மணிநேரமும் அறியலாம். 044-2538 4520 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இதுவரை இந்த எண்ணுக்கு 2,000 அழைப்புகள் வந்துள்ளன. மக்கள் அதிகமாக விழிப்புணர்வு பெற்றுள்ளதைத்தான் இது உணர்த்துகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல், மருத்துவ உதவிகளை அளித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நடவடிக்கைகள். சென்னையைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கும் என சந்தேகப்படும் 24 ஆயிரம் நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

'கரோனா குறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்- அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில் 200 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் 2,064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் நின்ற 1,024 பேர் மாநகராட்சி சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசைக் கேட்டுள்ளோம். சாலையில் உள்ள ஆதரவற்றோர், காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.

இதையும் படிங்க: 'கரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் மனம் உவந்து நிதியளிக்க வேண்டும்'

சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகள் கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கின்றன. கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதலமைச்சர் கூறியது போல 'வீட்டில் இருங்கள், விலகி இருங்கள், விழிப்புடன் இருங்கள்'.

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார். மூத்த அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பணிக் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது. இந்தியா பல சவால்களை சந்தித்திருக்கிறது. ஒழிக்க முடியாது என்று சொன்ன பெரியம்மையை ஒழித்துவிட்டோம். போலியோவையும் ஒழித்துக் காட்டினோம். எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா திறன் பெற்றிருக்கிறது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகள் கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கின்றன- அமைச்சர் ஜெயக்குமார்

கண்ணுக்குத் தெரியாதது இந்த கரோனா வைரஸ். கரோனா வைரஸ் முதல் நிலை, இரண்டாம் நிலையை கடந்து மூன்றாம் நிலையான சமூகப் பரவலை அடைந்துள்ளது. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து 3 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். அதன் மூலம், நாம் மூன்றாவது கட்டத்துக்கு செல்லவிடாமல் தடுக்க முடியும். கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கென தமிழ்நாடு அரசு 3,850 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மக்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு 24 மணிநேரமும் அறியலாம். 044-2538 4520 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இதுவரை இந்த எண்ணுக்கு 2,000 அழைப்புகள் வந்துள்ளன. மக்கள் அதிகமாக விழிப்புணர்வு பெற்றுள்ளதைத்தான் இது உணர்த்துகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல், மருத்துவ உதவிகளை அளித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நடவடிக்கைகள். சென்னையைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கும் என சந்தேகப்படும் 24 ஆயிரம் நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

'கரோனா குறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்- அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில் 200 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் 2,064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் நின்ற 1,024 பேர் மாநகராட்சி சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசைக் கேட்டுள்ளோம். சாலையில் உள்ள ஆதரவற்றோர், காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.

இதையும் படிங்க: 'கரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் மனம் உவந்து நிதியளிக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.