ETV Bharat / state

நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்! - People can comment about NEET Exam

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை உயர் நிலைக்குழுவிற்கு வரும் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்
நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்
author img

By

Published : Jun 17, 2021, 11:52 AM IST

Updated : Jun 17, 2021, 12:28 PM IST

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தருவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, சட்டத் துறை உள்ளிட்ட ஒன்பது அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கான முதல் கூட்டம் ஜுன் 14ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், “நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குழுவின் உறுப்பினர்களின் கருத்தாக இருக்கிறது. இது குறித்து ஆய்வுசெய்து அரசிற்கு அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்
நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்

இதற்கு பொதுமக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வரும் ஜூன் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கருத்துகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு"

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தருவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, சட்டத் துறை உள்ளிட்ட ஒன்பது அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கான முதல் கூட்டம் ஜுன் 14ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், “நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குழுவின் உறுப்பினர்களின் கருத்தாக இருக்கிறது. இது குறித்து ஆய்வுசெய்து அரசிற்கு அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்
நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்

இதற்கு பொதுமக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வரும் ஜூன் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கருத்துகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு"

Last Updated : Jun 17, 2021, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.