ETV Bharat / state

இளம்பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை: ஒருவர் கைது

author img

By

Published : Dec 25, 2020, 12:44 PM IST

சென்னை: இளம்பெண்ணுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்த நபர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

one person arrest in  west tambram for sexual harassment
one person arrest in west tambram for sexual harassment

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (34). திருமணமாகாத இவர் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் இவரது வீட்டின் அருகே வசிக்கும் வேல் பெருமாள் (49) என்பவர் மகாலட்சுமிக்கு, கடந்த ஒரு வருடமாகவே பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி இருமுறை புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வேல் பெருமாளை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும் இன்று(டிச.25) காலை மகாலட்சுமி அவரது வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, வேல் பெருமாள், மகாலட்சுமியிடம் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மகாலட்சுமி மீண்டும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வேல் பெருமாளை கைது செய்த காவலர்கள் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு: 70 வயது மூதாட்டி போன்று சிறுமியை ஆக்கிய கொடூரம்

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (34). திருமணமாகாத இவர் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் இவரது வீட்டின் அருகே வசிக்கும் வேல் பெருமாள் (49) என்பவர் மகாலட்சுமிக்கு, கடந்த ஒரு வருடமாகவே பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி இருமுறை புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வேல் பெருமாளை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும் இன்று(டிச.25) காலை மகாலட்சுமி அவரது வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, வேல் பெருமாள், மகாலட்சுமியிடம் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மகாலட்சுமி மீண்டும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வேல் பெருமாளை கைது செய்த காவலர்கள் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு: 70 வயது மூதாட்டி போன்று சிறுமியை ஆக்கிய கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.