சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் செல்ல கூடிய சாலையில் தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம் சென்றுக் கொண்டிருந்த மணல் லாரி ஒன்று லக்ஷ்மிபுரத்தை கடக்க முயன்றபோது லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட லாரி ஓட்டுனர் லாரியை விட்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் மற்றும் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் சண்முகம் (32) என்பவர் என்றும், இவர் முகையூர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தாரா அல்லது லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று போக்குவரத்து புலனாய்வு துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.