ETV Bharat / state

மாணவர்கள் சேர்க்கை இல்லாத 46 தொடக்கப்பள்ளிக்கு மானியம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

author img

By

Published : Sep 19, 2019, 3:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருக்கும் 46 தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி பாராமரிப்பு மானியம் வழங்கத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Govt

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு போன்ற செலவினங்களை மேற்கொள்வதற்கு மாநிலத் திட்ட இயக்குனரால் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுடலைக் கண்ணன் இந்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்புத் தொகையை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளார்.

TN Govt
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்கான பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் உள்ள 46 தொடக்கப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றி அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. எனவே 46 தொடக்கப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கத் தேவையில்லை என அறிவித்துள்ளது.

TN Govt
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

ஒன்று முதல் 15 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.12 ஆயிரத்து 500, 16 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், 101 முதல் 250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரம், 251 முதல் ஆயிரம் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 75 ஆயிரம், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சம் என மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் 10 சதவிகிதம் தொகையை பள்ளி வகுப்பறை, வளாகத்தூய்மை, கழிப்பறையை சுத்தமாக பராமரித்தல், கை கழுவுமிட வசதி, தூய்மையான குடிநீர் போன்றவை குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் இயங்காத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றுதல், மின்கட்டணம், இணையதள வசதி, ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Govt
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

இதையும் படிங்க...

பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்: இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு போன்ற செலவினங்களை மேற்கொள்வதற்கு மாநிலத் திட்ட இயக்குனரால் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுடலைக் கண்ணன் இந்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்புத் தொகையை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளார்.

TN Govt
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்கான பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் உள்ள 46 தொடக்கப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றி அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. எனவே 46 தொடக்கப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கத் தேவையில்லை என அறிவித்துள்ளது.

TN Govt
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

ஒன்று முதல் 15 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.12 ஆயிரத்து 500, 16 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், 101 முதல் 250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரம், 251 முதல் ஆயிரம் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 75 ஆயிரம், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சம் என மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் 10 சதவிகிதம் தொகையை பள்ளி வகுப்பறை, வளாகத்தூய்மை, கழிப்பறையை சுத்தமாக பராமரித்தல், கை கழுவுமிட வசதி, தூய்மையான குடிநீர் போன்றவை குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் இயங்காத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றுதல், மின்கட்டணம், இணையதள வசதி, ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Govt
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

இதையும் படிங்க...

பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்: இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்

Intro:மாணவர்கள் இல்லாத 46 தொடக்கப்பள்ளிக்கு
பணம் கிடையாது Body:மாணவர்கள் இல்லாத 46 தொடக்கப்பள்ளிக்கு
பணம் கிடையாது


சென்னை,


தமிழகத்தில் மாணவர்கள் இல்லாமல் இருக்கும் 46 தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி பாராமரிப்பு மானியம் வழங்கத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு போன்ற செலவினங்களை மேற்கொள்வதற்கு மாநிலத் திட்ட இயக்குனரால் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுடலைக் கண்ணன் இந்த ஆண்டு பள்ளிக்கான பராமரிப்புத் தொகையை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கி அனுமதி அளித்துள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி கடிதத்தில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்கான பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்கி உள்ளது.
இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லாம 46 தொடக்கப் பள்ளிகளை நூலகமாக மாற்றி அமைத்திட அரசு முடிவெடுத்துள்ளது. எனவே 46 தொடக்கப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கத் தேவையில்லை.

1 முதல் 15 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூபாய் 12,500 ம், 16 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 25 ஆயிரமும், 101 முதல் 250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரமும், 251 முதல் 1000 மாணவர்கள் உள்ளப் பள்ளிக்கு 75 ஆயிரமும், 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிக்கு ஒரு லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தாெகையில் 10 சதவீதம் தொகைய பள்ளி வகுப்பறை, வளாகத்தூய்மை, கழிப்பறைச் சுத்தமாக பராமரித்தல், கை கழுவ வசதி , தூய்மையான குடிநீர் போன்ற செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும்.


பள்ளிகளில் இயங்காத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களை மின்கட்டணம், இணையதள வசதி, ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் 1 முதல் 15 மாணவர்கள் வரையில் 3008 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 15 முதல் 100 மாணவர்கள் வரையில் 21,392 பள்ளிகளும், 100 முதல் 250 மாணவர்கள் வரையில் 6,093 பள்ளிகளும், 250 முதல் 1000 மாணவர்கள் வரையில் 701 பள்ளிகளும், 1000 மாணவர்களுக்கு மேல் 4 பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 31,198 தொடக்கப் பள்ளிகளில் 10 சதவீதம் பள்ளிகளில் 15 மாணவர்கள் மட்டும் படித்து வருவது தெரியவந்துள்ளது.









Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.