ETV Bharat / state

’நெக்ஸ்ட் தேர்வில் உடன்பாடில்லை’- அமைச்சர் பேச்சு!

author img

By

Published : Aug 17, 2019, 4:14 AM IST

சென்னை: நெக்ஸ்ட் தேர்வில் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை என்றும், அதற்கான பிரிட்ஜ் கோர்ஸ் வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

medical minister

இந்திய குழந்தை மருத்துவர் அகாடமியின் தமிழக பிரிவின் 44ஆவது வருடாந்திர மாநாடு மூன்று நாட்கள் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்காளிலிருந்தும் 1300க்கும் மேற்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். பச்சிளம் குழந்தை முதல் வளர் இளம்பருவத்தினர் வரை அனைத்து நிலைகளில் உள்ள குழந்தைகளை தாக்கும் நோய்கள் பற்றியும், நோய் தடுப்பு பற்றியும் தாங்கள் சந்தித்த நோயின் தாக்கங்கள் மற்றும் சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் சாதனை புரிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர், நோய்களை தடுப்பூசி மூலம் குறைப்பதில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. வரும் காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் இன்னும் குறையும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நெக்ஸ்ட் தேர்வில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. பிரிட்ஜ் கோர்ஸ் வேண்டாம் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது என்றார்.

இந்திய குழந்தை மருத்துவர் அகாடமியின் தமிழக பிரிவின் 44ஆவது வருடாந்திர மாநாடு மூன்று நாட்கள் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்காளிலிருந்தும் 1300க்கும் மேற்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். பச்சிளம் குழந்தை முதல் வளர் இளம்பருவத்தினர் வரை அனைத்து நிலைகளில் உள்ள குழந்தைகளை தாக்கும் நோய்கள் பற்றியும், நோய் தடுப்பு பற்றியும் தாங்கள் சந்தித்த நோயின் தாக்கங்கள் மற்றும் சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் சாதனை புரிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர், நோய்களை தடுப்பூசி மூலம் குறைப்பதில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. வரும் காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் இன்னும் குறையும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நெக்ஸ்ட் தேர்வில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. பிரிட்ஜ் கோர்ஸ் வேண்டாம் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது என்றார்.

Intro:Body:நெக்ஸ்ட் தேர்வில் தமிழக அரசிற்கு உடன்பாடில்லை என்றும், அதற்கான பிரிட்ஜ் கோர்ஸ் வேண்டாம் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய குழந்தை மருத்துவர் அகாடமியின் தமிழக பிரிவின் 44வது வருடாந்திர மாநாடு மூன்று நாட்கள் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்..

இம்மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் என மொத்தம் 1300 குழந்தை சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
பச்சிளம் குழந்தை முதல் வளர்இளம்பருவத்தினர் வரை அனைத்து நிலைகளில் உள்ள குழந்தைகளை தாக்கும் நோய்கள் பற்றியும் நோய்தடுப்பு பற்றியும் தாங்கள் சந்தித்த நோயின் தாக்கங்கள் மற்றும் சிகிச்சை முறை குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட மருத்துவர்கள் பகிர்ந்துக்கொண்டனர்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..

தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து 1000 என்பதற்கு 16 என்ற அளவில் குறைந்துள்ளதாகவும்
அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தைகள் இறப்பில் சாதனை புரிந்துள்ளதாகவும் அதை இன்னும் ஒற்றை இலக்காக குறைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மேலும் நோய் தடுப்பில் தடுப்பூசி மூலம் குறைப்பதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது என்றும் ஒன்றரை கிலோவிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படாமல் தடுக்க நிமோகாக்கல் தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் முதல்முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்
வரும் காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறையும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் நெக்ஸ்ட் தேர்வில் தமிழக அரசிற்கு உடன்பாடில்லை என்றும் , Bridge courses வேண்டாம் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், 1000 நபர்களுக்கு 1 மருத்துவர் என்பது தான் மத்திய அரசின் இலக்கு என்றும் ஆனால் 615 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற இலக்கை ஏற்கனவே நாம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.