ETV Bharat / state

நீட் தேர்வு பாடத்திட்டம் குறைப்பு! - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 9:16 PM IST

NEET EXAM: அடுத்த வருடம் மே மாதம் நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கான பாடத் திட்டத்தை குறித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

NEET EXAM
நீட் தேர்வு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வின் பாடத் திட்டத்தினை குறைத்து தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் nta.ac.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கரோனா காலக்கட்டத்தில் சிபிஎஸ்சிஇ மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. கரோனா காலக் கட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

அடுத்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராக இருப்பதால், கடந்த காலங்களில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு வினாத்தாள் அமைக்கப்பட உள்ளன. ஆதலால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தவிர்த்து மீதம் இருக்கக் கூடிய பாடத் திட்டத்தில் எந்த பாடங்களை மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் குழப்பம் இல்லாமலும், சரியாக நீட் தேர்வுக்கு தயாராகவும், இந்த நடவடிக்கையை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நாடு முழுவதும் வருகின்ற 2024ஆம் ஆண்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை பதவியேற்பு!

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வின் பாடத் திட்டத்தினை குறைத்து தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் nta.ac.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கரோனா காலக்கட்டத்தில் சிபிஎஸ்சிஇ மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. கரோனா காலக் கட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

அடுத்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராக இருப்பதால், கடந்த காலங்களில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு வினாத்தாள் அமைக்கப்பட உள்ளன. ஆதலால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தவிர்த்து மீதம் இருக்கக் கூடிய பாடத் திட்டத்தில் எந்த பாடங்களை மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் குழப்பம் இல்லாமலும், சரியாக நீட் தேர்வுக்கு தயாராகவும், இந்த நடவடிக்கையை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நாடு முழுவதும் வருகின்ற 2024ஆம் ஆண்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை பதவியேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.