ETV Bharat / state

மாநகராட்சி பெண் ஊழியர் மரணத்தில் சந்தேகம்..! சிக்கிய சிசிடிவி பதிவுகள்..! - mystery in municipality labour death

சென்னை: சைதாப்பேட்டையில் மாநகராட்சி பெண் ஊழியர் இறந்தது இயற்கையான மரணம் என்று கருதிய நிலையில், தற்போது வெளியாகியிருக்கிருக்கும் சிசிடிவி காட்சிகளால், அவர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளாரா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மாநகராட்சி பெண் ஊழியர்
author img

By

Published : Aug 13, 2019, 10:19 PM IST

சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. சென்னை மாநகராட்சியில், இவர் தந்தை வேலை பார்க்கும்பொழுது இறந்ததால் கருணை அடிப்படையில், ஜெயாவிற்கு மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. குடும்ப பிரச்னை காரணமாகக் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக இங்கு வாழ்ந்து வரும் ஜெயா, கணவர் இறந்த பிறகு தன்னுடைய குழந்தையையும் கணவர் வீட்டிலேயே கொடுத்துவிட்டு தனியாக வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக, அவரது மூத்த சகோதரி தேவி என்பவர் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். ஜெயா மாநகராட்சி ஊழியராக இருக்கும்போது உயிரிழந்துள்ளதால், நிவாரணம் பெறுவதற்காக ஜெயாவின் சகோதரர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாநகராட்சி பெண் ஊழியர் மரணத்தில் சந்தேகம்..! சிக்கிய சிசிடிவி பதிவுகள்..!

உடல் கூறாய்வு முடிந்த வீட்டிற்கு வந்த பிறகு, சொத்து தகராறு காரணமாக உறவினர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னுக்குப்பின் முரணாகத் தேவி பேசியதால் அங்கு வசிப்பவர்கள், சந்தேகமடைந்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் துறையினர் விசாரணைக்கு வந்தபோது தேவி மயக்கமடைந்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து ஜெயா வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த காட்சியில் , ஞாயிறு நள்ளிரவு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயாவின் வீட்டிற்கு வந்தது தெரியவந்துள்ளது.

எனவே ஜெயா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற அடிப்படையில் தற்போது விசாரணையை காவல் துறையினர் நடத்திவருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. சென்னை மாநகராட்சியில், இவர் தந்தை வேலை பார்க்கும்பொழுது இறந்ததால் கருணை அடிப்படையில், ஜெயாவிற்கு மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. குடும்ப பிரச்னை காரணமாகக் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக இங்கு வாழ்ந்து வரும் ஜெயா, கணவர் இறந்த பிறகு தன்னுடைய குழந்தையையும் கணவர் வீட்டிலேயே கொடுத்துவிட்டு தனியாக வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக, அவரது மூத்த சகோதரி தேவி என்பவர் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். ஜெயா மாநகராட்சி ஊழியராக இருக்கும்போது உயிரிழந்துள்ளதால், நிவாரணம் பெறுவதற்காக ஜெயாவின் சகோதரர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாநகராட்சி பெண் ஊழியர் மரணத்தில் சந்தேகம்..! சிக்கிய சிசிடிவி பதிவுகள்..!

உடல் கூறாய்வு முடிந்த வீட்டிற்கு வந்த பிறகு, சொத்து தகராறு காரணமாக உறவினர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னுக்குப்பின் முரணாகத் தேவி பேசியதால் அங்கு வசிப்பவர்கள், சந்தேகமடைந்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் துறையினர் விசாரணைக்கு வந்தபோது தேவி மயக்கமடைந்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து ஜெயா வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த காட்சியில் , ஞாயிறு நள்ளிரவு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயாவின் வீட்டிற்கு வந்தது தெரியவந்துள்ளது.

எனவே ஜெயா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற அடிப்படையில் தற்போது விசாரணையை காவல் துறையினர் நடத்திவருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:சென்னை சைதாப்பேட்டையில் மாநகராட்சி பெண் ஊழியர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளாரா என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. சென்னை மாநகராட்சியில் இவர் தந்தை வேலை பார்க்கும் பொழுது இறந்ததால் கருணை அடிப்படையில் ஜெயாவிற்கு மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது . குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக இங்கு வாழ்ந்து வருகிறார். கணவர் இறந்த பிறகு ,தன்னுடைய குழந்தயையும் கணவர் வீட்டிலேயே கொடுத்துவிட்டு,,தனியாக சைதாப்பேட்டையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக அவரது மூத்த சகோதரி தேவி என்பவர் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் இடம் தெரிவித்துள்ளார். ஜெயா மாநகராட்சி ஊழியராக இருக்கும் போது உயிரிழ்ந்துள்ளதால்,நிவாரணம் பெறுவதற்காக ஜெயாவின் சகோதரர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, வீட்டிற்கு வந்த போது ,சொத்து தகராறு காரணமாக உறவினர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்னுக்குபின் முரணாக தேவி பேசியதால் அங்கு வசிப்பவர்கள் இடையே சந்தேகம் ஏற்பட்டு போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணைக்கு வந்த போது தேவி மயக்கமடைந்து ,சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். .ஜெயா வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவியில் ஞாயிறு நள்ளிரவு இரண்டு மர்ம நபர்கள் ஜெயாவின் வீட்டிற்கு வந்தது தெரிய வந்துள்ளது. எனவே ஜெயா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற அடிப்படையில் விசாரணையை போலிசார் நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ,கொலை செய்யப்பட்டது உறுதியாக தெரிய வரும் என போலிசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியான பிறகு,இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.