ETV Bharat / state

முருகன் இட்லி கடை உரிமம் ரத்து; உணவுத் துறை அதிரடி! - murugan idly shop permit cancelled

சென்னையை அடுத்த அம்பத்தூரில் இயங்கிவந்த முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

murugan idly shop
author img

By

Published : Sep 10, 2019, 7:51 PM IST

சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ஹோட்டல் குழுமங்களில் ஒன்றான முருகன் இட்லி கடைக்கு பல்வேறு கிளைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக பிரபாகரன் என்பவர் வாட்ஸ் ஆப் மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் உணவு தயாரிக்கும் கூடத்தில் கடந்த ஏழாம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த உணவுகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அதில் சரியான சுத்தம் கடைப்பிடிக்காமல் இருப்பது தெரியவந்தது.

முருகன் இட்லி கடை

அத்துடன் பூச்சிக் கட்டுப்பாடு முறையும் சரியாகப் பின்பற்றவில்லை எனவும், உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அலுவலர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த குறிப்பிட்ட முருகன் இட்லி கடை கிளையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ஹோட்டல் குழுமங்களில் ஒன்றான முருகன் இட்லி கடைக்கு பல்வேறு கிளைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக பிரபாகரன் என்பவர் வாட்ஸ் ஆப் மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் உணவு தயாரிக்கும் கூடத்தில் கடந்த ஏழாம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த உணவுகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அதில் சரியான சுத்தம் கடைப்பிடிக்காமல் இருப்பது தெரியவந்தது.

முருகன் இட்லி கடை

அத்துடன் பூச்சிக் கட்டுப்பாடு முறையும் சரியாகப் பின்பற்றவில்லை எனவும், உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அலுவலர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த குறிப்பிட்ட முருகன் இட்லி கடை கிளையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Intro:சென்னை அம்பத்தூரில் இயங்கிவரும் முருகன் இட்லி கடையில் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.Body:சென்னை அம்பத்தூரில் இயங்கிவரும் முருகன் இட்லி கடையில் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.


சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட முருகன் இட்லி கடை இயங்கி வருகிறது.இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக பிரபாகரன் என்பவர் வாட்ஸ்அப் செயலி மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் உணவு தயாரிக்கும் கூடத்தில் கடந்த ஏழாம் தேதி ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தயார் செய்யப்பட்ட உணவுகள் சமைப்பதற்கு முன் இருக்கும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்திருக்கின்றனர்.ஆனால் அதில் சரியான சுத்தம் கடைப் பிடிக்காமல் இருப்பது தெரியவந்தது அத்துடன் பூச்சிக் கட்டுப்பாடு முறை சரியாக பின்பற்றவில்லை எனவும் இது மட்டுமல்லாது உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. இட்லி கடைக்கு லைசென்ஸ் வழங்கிய போதும் அதனை அதற்கான இடத்தில் வைக்கவில்லை என்றும் இப்படி பல்வேறான காரணங்களுக்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முருகன் இட்லி கடை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.