ETV Bharat / state

சென்னையில் தண்ணீர் பஞ்சமா? -அமைச்சர் வேலுமணி - press meet

சென்னை: தண்ணீர் பிரச்னை இருப்பதாக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருவதாக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார்.

அமைச்சர் வேலுமணி
author img

By

Published : Jun 17, 2019, 11:11 PM IST

சென்னையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் வேலுமணி, சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. ஹோட்டல்கள் மூடப்படுவதாக கூறுவதும் தவறான ஒன்று.

அமைச்சர் வேலுமணி செய்தியாளர் சந்திப்பின்போது

இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மண்டலங்களில் கண்காணிப்பு பொறியாளர், 200 வார்டுகளில் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க அலுவலர்கள் செயல்பட வேண்டும். மெத்தனம் காட்டும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இருபத்தி நான்கு மணிநேரமும் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீர் பணிகளைக் கண்காணிக்க செயலி உருவாக்கி செயல்பட வேண்டும். செயலிகளில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக அலுவலர்கள் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது. இச்செயல்பாடுகளுக்கு பத்திரிக்கை ஊடக நண்பர்கள் உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் வேலுமணி, சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. ஹோட்டல்கள் மூடப்படுவதாக கூறுவதும் தவறான ஒன்று.

அமைச்சர் வேலுமணி செய்தியாளர் சந்திப்பின்போது

இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மண்டலங்களில் கண்காணிப்பு பொறியாளர், 200 வார்டுகளில் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க அலுவலர்கள் செயல்பட வேண்டும். மெத்தனம் காட்டும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இருபத்தி நான்கு மணிநேரமும் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீர் பணிகளைக் கண்காணிக்க செயலி உருவாக்கி செயல்பட வேண்டும். செயலிகளில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக அலுவலர்கள் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது. இச்செயல்பாடுகளுக்கு பத்திரிக்கை ஊடக நண்பர்கள் உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.06.19

அதிகாரிகள் களத்தில் இறங்கி மக்களுக்கான தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: அமைச்சர் வேலுமணி...

 அனைத்துத்துறை அதிகாரிகளுடன் சென்னை குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, 
 ஊடகங்களில் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. 525 எம்.எல்.டி தண்ணீர் செப்டம்பர் வரை நம்மால் கொடுக்க முடியும்.  அதிகாரிகள் என்ன நடக்கிறது என கண்காணிப்பில் இறங்குங்கள். ஹோட்டல்கள் முடப்படுவதாக கூறுவதும் தவறான பிரச்சாரமாகும். டோல் ப்ரீ எண் கொடுத்தும் அதிகாரிகள் பொதுமக்கள் அழைத்தால் முறையாக பதில் சொல்லுங்கள், அவ்வாறு ரெஸ்பான்ஸ் இல்லை என தெரிந்தால் எந்த அதிகாரியாக இருந்தாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.. அப்போது தான் என்ன நடக்கிறது என்று தெரியும். நான் பல அதிகாரிகளுக்கு பணி உயர்வு கொடுத்துள்ளோம். எல்லா உதவிகளையும் செய்துள்ளோம். எனவே, அதிகாரிகள் களத்தில் வேலை செய்ய வேண்டும். மண்டலங்களில் கண்காணிப்பு பொறியாளர், 200 வார்டுகளில் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க அதிகாரிகள் செயல்பட வேண்டும்.. 24/ 7 அளவில் இரவு பகலாக அதிகாரிகள் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் பணிகளை கண்காணிக்க செயலி உருவாக்கி செயல்பட வேண்டும்.. மண்டல வாரியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செயலிகளில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.. 
பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது.. அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. மறு சுழற்சி செய்யப்படும் தண்ணீர் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மழை வெள்ளம் வந்தபோதும் கூட உள்ளாட்சித்துறைதான் சிறப்பாக பணியாற்றியது. கஜா புயலிலும் நாம் சிறப்பாக பணியாற்றி உள்ளோம்.. ஆனால் இப்போது தவறான ஒரு மாயையை உருவாக்க முயல்கிறார்கள்... காலை 6 மணிக்கே பணிகளை தொடங்குங்கள்... இச்செயல்பாடுகளுக்கு பத்திரிக்கை ஊடக நண்பர்கள் உதவ வேண்டும்.. இதனைவிட சிரமங்களை கூட சரி செய்துள்ளோம்.. தற்போதைய பிரச்சினை என்பது பெரிய விசயமில்லை என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.