ETV Bharat / state

தஞ்சையில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை - அமைச்சர் நாசர்

author img

By

Published : Aug 29, 2021, 2:16 AM IST

பால் உற்பத்தியாளர்கள் நலன்கருதி தஞ்சாவூரில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் எனப் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சனிக்கிழமை (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமிப்புத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் வளத்துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.

இதில் பால் வளத்துறை துறைகளின் மீதான சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் சா.மு.நாசர் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், "சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை 2021-22 ஆம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆவின் பொருள்களை துபாய், அபுதாபி, ஓமன், கலிபோர்னியா போன்ற நாடுகளில் விநியோகம் செய்ய முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் வாரிசு உள்பட 47 பால்வளத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்" என்றார்.

பால் வளம் மானிய கோரிக்கையில் 16 புதிய அறிவிப்புகள்:

* தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பால் தொகுப்பு குளிர்விப்பான்களை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.

* பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சேவைகளில் ஒன்றான அவர்கள் இலங்கைக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ஒருவரை 6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் தேவைக்காக 2 குளிர் காப்பு மற்றும் மூன்று குளிர்சாதன வசதி வேன்கள் 80 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.

* பாலின் தரத்தை மேம்படுத்த பால் கேன்களை குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு வழங்கப்படும்.

* கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் 453 பால் பகுப்பாய்வு கருவிகள் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

* 60 தானியங்கி பால் கறக்கும் கருவிகள் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 36 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு மாதம்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.

* புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவி இடங்கள் அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* மின்னணு நிர்வாகம் ( e-governance ) முறையினை கையாண்டு சிக்கனம் மற்றும் நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் முறைகள் செயல்படுத்தப்படும்.

* பால்வளத் துறையின் செயல்பாடுகளை மின்னணு மயமாக்குதல் குறிக்கோளாக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* உடனடி பால் மதிப்பாய்வு மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குதல் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு வாயிலாக பால் பணம் பட்டுவாடா ஆகியன செயல்படுத்தப்படும்.

* இணைய வழி மூலமாக பால் அட்டை விற்பனை செய்யப்படும்.

* அனைத்து பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் பால் பண்ணைகளில் கண்காணிப்பு கருவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஆவின் முகவர்கள் உரிமம் இணைய வழியாக புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஆவின் பால் மற்றும் பால் பொருள்களின் விற்பனை முறையில் சீர்திருத்தம் மற்றும் விற்பனை விரிவாக்கம் செய்து அதிக லாபத்தை ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* முதல்முறையாக உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து குரல் ஒலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலான இலவச சேவை அறிமுகப்படுத்தப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பால் உற்பத்தி தொடர்பான பயிற்சிக்காக விழுப்புரம் மாதவரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்கள் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் வலுப்படுத்தப்படும்.

* மூலப்பொருட்கள் ஆய்வுக்கூடம் மற்றும் நுண்ணுயிரியல் பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் ஆகியன அம்பத்தூர் பால் பண்ணையில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* அம்பத்தூர், சோழிங்கநல்லூர், திருச்சி மற்றும் கோயம்புத்தூர் பால் பண்ணைகளில் திரட்டுப்பால் தயாரிக்க நவீன சவ்வூடு வடிகட்டுதல் தொழில்நுட்பத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் மோர், தயிர் தயாரிக்கும் இயந்திரங்கள் ரூபாய் 3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* சேலம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் பால்கோவா தயாரிக்கும் இயந்திரங்களுடன் கூடிய அலகு ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் நலன்கருதி தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தி திடலில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சனிக்கிழமை (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமிப்புத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் வளத்துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.

இதில் பால் வளத்துறை துறைகளின் மீதான சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் சா.மு.நாசர் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், "சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை 2021-22 ஆம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆவின் பொருள்களை துபாய், அபுதாபி, ஓமன், கலிபோர்னியா போன்ற நாடுகளில் விநியோகம் செய்ய முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் வாரிசு உள்பட 47 பால்வளத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்" என்றார்.

பால் வளம் மானிய கோரிக்கையில் 16 புதிய அறிவிப்புகள்:

* தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பால் தொகுப்பு குளிர்விப்பான்களை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.

* பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சேவைகளில் ஒன்றான அவர்கள் இலங்கைக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ஒருவரை 6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் தேவைக்காக 2 குளிர் காப்பு மற்றும் மூன்று குளிர்சாதன வசதி வேன்கள் 80 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.

* பாலின் தரத்தை மேம்படுத்த பால் கேன்களை குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு வழங்கப்படும்.

* கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் 453 பால் பகுப்பாய்வு கருவிகள் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

* 60 தானியங்கி பால் கறக்கும் கருவிகள் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 36 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு மாதம்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.

* புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவி இடங்கள் அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* மின்னணு நிர்வாகம் ( e-governance ) முறையினை கையாண்டு சிக்கனம் மற்றும் நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் முறைகள் செயல்படுத்தப்படும்.

* பால்வளத் துறையின் செயல்பாடுகளை மின்னணு மயமாக்குதல் குறிக்கோளாக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* உடனடி பால் மதிப்பாய்வு மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குதல் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு வாயிலாக பால் பணம் பட்டுவாடா ஆகியன செயல்படுத்தப்படும்.

* இணைய வழி மூலமாக பால் அட்டை விற்பனை செய்யப்படும்.

* அனைத்து பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் பால் பண்ணைகளில் கண்காணிப்பு கருவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஆவின் முகவர்கள் உரிமம் இணைய வழியாக புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஆவின் பால் மற்றும் பால் பொருள்களின் விற்பனை முறையில் சீர்திருத்தம் மற்றும் விற்பனை விரிவாக்கம் செய்து அதிக லாபத்தை ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* முதல்முறையாக உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து குரல் ஒலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலான இலவச சேவை அறிமுகப்படுத்தப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பால் உற்பத்தி தொடர்பான பயிற்சிக்காக விழுப்புரம் மாதவரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்கள் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் வலுப்படுத்தப்படும்.

* மூலப்பொருட்கள் ஆய்வுக்கூடம் மற்றும் நுண்ணுயிரியல் பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் ஆகியன அம்பத்தூர் பால் பண்ணையில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* அம்பத்தூர், சோழிங்கநல்லூர், திருச்சி மற்றும் கோயம்புத்தூர் பால் பண்ணைகளில் திரட்டுப்பால் தயாரிக்க நவீன சவ்வூடு வடிகட்டுதல் தொழில்நுட்பத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் மோர், தயிர் தயாரிக்கும் இயந்திரங்கள் ரூபாய் 3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* சேலம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் பால்கோவா தயாரிக்கும் இயந்திரங்களுடன் கூடிய அலகு ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் நலன்கருதி தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தி திடலில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.