ETV Bharat / state

5 அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Feb 27, 2023, 2:04 PM IST

சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

To
To

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஈரோட்டைச் சேர்ந்த மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையால் குணமடைந்த மணி என்ற நபரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(பிப்.27) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், "சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

4 கோடி ரூபாய் செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈரோட்டைச் சேர்ந்த 52 வயதான மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த துறை இங்கு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இன்று, முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பெற்றுக் கொண்டால் 30 முதல் 35 லட்சம் செலவாகும், ஆனால் இங்கு தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டுமே கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில், இரண்டாவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கின்னசில் இடம் பெற்றுள்ளார் மருத்துவர் ரேலா.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று 1,760 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. ஒரு கோடி பேருக்கும் மேல் இந்த காப்பீடு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். ஐந்து மருத்துவமனைகளிலும் ஓராண்டிற்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அதிநவீன உபகரணங்களை வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாளை கோட்டூர்புரத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 200 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் எம்.ஆர்.பி மூலம் 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். மேலும் விதிமுறைகளின்படி காலி பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: தங்கம் கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்.. சென்னையில் கடத்தல் ஆசாமிக்கு வலைவவீச்சு!

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஈரோட்டைச் சேர்ந்த மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையால் குணமடைந்த மணி என்ற நபரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(பிப்.27) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், "சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

4 கோடி ரூபாய் செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈரோட்டைச் சேர்ந்த 52 வயதான மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த துறை இங்கு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இன்று, முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பெற்றுக் கொண்டால் 30 முதல் 35 லட்சம் செலவாகும், ஆனால் இங்கு தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டுமே கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில், இரண்டாவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கின்னசில் இடம் பெற்றுள்ளார் மருத்துவர் ரேலா.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று 1,760 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. ஒரு கோடி பேருக்கும் மேல் இந்த காப்பீடு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். ஐந்து மருத்துவமனைகளிலும் ஓராண்டிற்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அதிநவீன உபகரணங்களை வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாளை கோட்டூர்புரத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 200 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் எம்.ஆர்.பி மூலம் 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். மேலும் விதிமுறைகளின்படி காலி பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: தங்கம் கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்.. சென்னையில் கடத்தல் ஆசாமிக்கு வலைவவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.